Pages

Monday 24 February 2014

My 22nd Article in the Hindu Tamil Dated on 24th Feb 2014, about "What is the Cost of Delay In Investment?"

முதலீட்டில் கால தாமதத்திற்கான விலை என்ன? பி. பத்மநாபன்


முதலீட்டில் மிக முக்கிய விஷயம் எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும், அதேபோல எவ்வளவு காலம் காத்திருக்கிறோமோ அவ்வளவு காலம் காத்திருந்தால், நிறைய பயனை அடையலாம்.

மேலும் ஒவ்வொரு கடனுக்கும், ஒவ்வொரு வட்டி விகிதம், எந்த கட னுக்கு அதிக வட்டியோ அதை முதலில் முடிக்க வேண்டும்.

நிறையபேர் தயக்கம் காட்டும் மற்றொரு விஷயம், அவர்கள் முதலீட்டை சரண்டர் செய்யும்போது தான் செலுத்திய தொகையை விட கம்மியாக இருப்பதால் அதை பல காலம் தொடர்ந்து அசலுக்கு நஷ்டமில்லாமல் எடுக்க வேண்டும் என்று நினைப்பது. அசல்தான், நஷ்டமில்லையே தவிர அதற்குண்டான மதிப்பு மிகக் குறைவு, ஏனெனில் சரண்டர் செய்யாவிட்டால் நாம் அந்த முதலீட்டை தொடர்ந்திருப்போம், அதனுடய பலன் முடிவில்தான் தெரியும். அதற்குப் பதிலாக, இப்போது நஷ்டம் அடைந்தாலும் மீதமுள்ள பிரீமியத்தைக் கட்டாமல், அதைவிட அதிகமாக சம்பாதிக்க முடியும்.

நேரத்தின் மதிப்பை அறிந்து கொள்ளவேண்டுமானால் நாம் இவர்களிடம் கேட்கவேண்டும் என்று சொல்வார்கள்.
† ஒரு வருடத்தின் விலை, தேர்வில் தவறிய மாணவனிடம்
† ஒரு மாதத்தின் விலை, ஒரு தாய் குறை பிரசவத்தில் பெற்றெடுத்த குழந்தை
† ஒரு வாரத்தின் விலை, ஒரு வாராந்திர பத்திரிகை ஆசிரியரிடம்
† ஒரு மணி நேரத்தின் விலை, காதலன் காதலிக்காக காத்திருக்கும் சமயம்
† ஒரு நிமிடத்தின் விலை, ரயிலை தவறவிட்டவரிடம்
† ஒரு விநாடியின் விலை, விபத்தில் தப்பிய ஒருவரிடம்
† ஒரு மில்லி விநாடியின் விலை, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரிடம்.

இன்று நாம் தாமதிக்கும் ஒவ்வொரு மாதமும் நம்முடைய நீண்ட கால முதலீட்டில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் பார்க்கலாம்.

பெரும்பாலோருக்கு இன்று உள்ள பணத்திற்கும் 5 வருடம் கழித்து கிடைக்கும் பணத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை சில உதாரணங்களின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம்.

ராஜா, ரவி, மற்றும் ராம் நெருங்கிய நண்பர்கள், அவர்களுக்கு வயது 25. மூவருக்கும் 10,000 சம்பளம். ராஜா அவற்றில் 20% முதலீட்டிற்கு ஒதுக்கிய பின்பு மற்றவற்றை செலவிடுகிறான். ரவி கிடைப்பதோ 10,000 இதில் எங்கு சேமிப்பது, சேமித்தால் நிறைய சேமிக்கவேண்டும். 2000த்தில் என்ன கிடைக்கும் என்று சேமிக்கவில்லை. ராமோ கேட்கவே வேண்டாம், நாளை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்று கஷ்டப்படமுடியாது, மேலும் எவ்வளவு நாள் நாம் இருப்போம் என்றும் தெரியாது என்ற இன்றைய இளைய சமுதாயத்தின் அடையாளம்.

ரவி 5 வருடம் கழித்து, அடுத்த 25 வருடம், மாதம் 4000 சேமிக்கத் தொடங்குகிறான், ராஜா மாதம் 2000 வீதம் 30 வருடம் சேமிக்கிறான். மொத்தம் ராஜா சேமிப்பது 2000*12*30=7.2 லட்சம். ரவி சேமிப்பது 4000*12*25 = 12 லட்சம். ராமிற்கு 10 வருடம் கழித்துதான் தான் எதுவுமே சேமிக்கவில்லை என்ற எண்ணம் வருகிறது. அதனால் என்ன, அவர்கள் சேர்ப்பதைவிட அதிகம் சேர்க்கிறேன் இன்னும் 20 வருடம் என்று மாதம் 8000 ரூபாய் சேமிக்கதொடங்குகிறான்.

8000*12*20=19,20,000. இவர்களது 55ஆவது வயதில் கிடைக்கும் தொகை, ராஜாவிற்கு 1.40 கோடி, ரவிக்கு கிடைத்ததோ 1.31 கோடி. ராமிற்கு 1.21 கோடி. 15% கூட்டு வட்டியில். அதற்கு மாறாக ரவியும், 5 வருடம் கழித்து மாதம் 2000 சேமித்து தவறிய முதல் 5 வருடத்திற்கான 2000*12*5=1,20,000 த்தையும் சேமித்தால் கிடைக்ககூடியது 39.5 +65.68 =1.05 கோடி. இடைவெளி 35 லட்சம்.

ராம் 10 வருடம் தவறிய 2.40 லட்சமும் அதை தொடர்ந்து 20 வருடத்திற்கு மாதம் 2000 சேமித்தால் அவருக்குகிடைக்கக்கூடிய தொகை 39.27+30.31=70 லட்சம். மூவரும் சேமிக்க கூடிய தொகை ஒன்று ஆனால் கால கட்டம் வேறு சேமிப்பது சிறிய தொகையானாலும் சீக்கிரம் ஆரம்பித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகப் புரியும்.

30 வருடம், மாதம் 2000 ரூபாய் முதலீட்டை ஒருவர் ஒரு மாதம் தள்ளிப் போடுகிறார் என்றால் அவரது இழப்பு 1.75 லட்சம். ஒரு வருடம் தள்ளிபோடுகிறார் என எடுத்துக்கொண்டால் 19.64 லட்சம்!
இதேபோல் ஒருவர் தாமதிக்கும் ஒவ்வொரு வருடமும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்கும். உதாரணமாக 500 ரூபாய் எடுத்துக்கொண்டால் 20 வருடத்திற்குஅதுவே 10,000 ஆகிவிடும். முதலீட்டில் முதலீட்டின் அளவை விட அதில் எவ்வளவு காலம் இணைந்திருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய விஷயம். கூட்டுவட்டியின் மகத்துவமே நீண்ட கால அடிப்படையில் தான் தெரியும்.

நமது மும்பை பங்கு சந்தை கடந்த 34 வருடங்களாக 17% கூட்டு வட்டியில் இன்று 20,700. அதாவது 207 மடங்கு. மடங்கை பார்க்கும்போது பெரிதாக உள்ளது. ஆனால் கூட்டு வட்டியை கணக்கில் கொண்டால் பெரிதாக தோன்றவில்லை.பெரிய மடங்குகளை எளிதாக அடையலாம், நாம் சீக்கிரமே முதலீட்டை தொடங்கினால். மேலும் நீண்ட கால முதலீட்டை செய்யும்போது நாம் வைப்பு நிதி திட்டத்தை தேர்வு செய்ய கூடாது ஏனெனில் நமக்கு பணவீக்கம் எவ்வளவு என்று தெரியாது. தெரியாத பணவீக்கத்திற்கு தெரிந்த வட்டியிடம் சரண் ஆகக்கூடாது. நீண்ட கால முதலீடுகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய முதலீட்டில்தான் இருக்கவேண்டும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது.

சாராம்சம்:
முதலீடு செய்வதற்கு அளவு தேவை இல்லை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு, வேலைக்கு சேர்ந்த உடன் சேமிக்கத் தொடங்க வேண்டும். நம்முடைய மிகப்பெரிய தேவைகள் யாவும் நீண்ட கால அடிப்படையில் உள்ளதால் அதையாவும் எளிதாக அடையமுடியும். மியூச்சுவல் ஃபண்ட் தவிர எந்த ஒரு முதலீடும் தெளிவாக இருப்பதில்லை. யார் எங்கு வாங்கினாலும் ஒரே விலை. ஆனால் மற்ற முதலீட்டில் அப்படி இல்லை. தினசரி அதனுடைய செயல்பாட்டை தெரிந்து கொள்வதால் பலருக்கு பயம். ஒரு நிர்வாகத்தில் கூட ஒருவருடைய வேலைத்திறனை வருடத்திற்கு ஒருமுறை தான் எவ்வாறு செயல்பட்டார்கள் என்று பார்கிறார்கள்.

ஆனால் நம்முடைய முதலீட்டின் செயல்பாட்டை நாம் முடிந்தவரை தினசரி பார்க்க முயல்கிறோம். இது எவ்வளவு தவறான விஷயம். அதனால், நீண்ட கால அடிப்படைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தவிர்க்க முடியாதது.

சென்செக்ஸ் ஜனவரி 14, 2008ல் 20,728. கடந்த வெள்ளிக்கிழமை அதாவது, பிப்ரவரி 21, 2014ல் 20,700. சந்தை 6 வருடத்திற்கு மேல் அதே இடம். ஆனால் சந்தை மேலும் கீழும் சென்றதால்தான் இந்த அளவிற்கு ரிடர்ன்ஸ் கிடைத்துள்ளது. இந்த கால கட்டத்தில் SIP முறையில் 10 முதல் 15% வரை கூட்டு வட்டி கிடைத்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் ஒழுங்குடுத்தப்பட்ட நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் உள்ள முதலீடு ஆகும்.

இதை தகுந்த ஆலோசகரின் பெயரில் செய்தால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஒரு மாத தாமதம், சில லட்சம் 1 வருட தாமதம். பல லட்சம் ரூபாய். குறைந்தபட்சமாக 1000 ரூபாய்க்கு கூட சேமிக்க தொடங்கலாம், அதனால் சிறிய தொகை என்று அலட்சியப்படுத்தவேண்டாம். கூட்டு வட்டியை, எட்டாவது உலக அதிசயம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இதில் இன்னுமொரு பயன், சிறுவயதிலேயே நாம் பணத்தின் அருமையை உணர்வதால் தேவையற்ற செலவுகளை கண்டிப்பாக குறைக்கமுடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நேரத்தைமதிப்போம், உடனடியாக செயல்படுவோம், தரமான இந்தியாவை உருவாக்குவோம்.
padmanaban@fortuneplanners.com

Monday 17 February 2014

My 21st Article in the Hindu dated 17th February, 2014 about "Prepaying Home Loan, Is That Right Option?"

வீட்டுக்கடன் தவணை: சீக்கிரம் கட்டி முடிப்பது நல்லதா?​​ 

பி. பத்மநாபன்



இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லோரும் தவறாமல் செய்வது வீட்டுக்கடன் வாங்குவது. வீட்டுக்கடன் பொதுவாக 20 வருடம் என எடுத்துக்கொண்டால், ஒரு லட்சத்திற்கு மாதம் 1,000 ரூபாய், 10.5% வட்டி விகிதத்தில் வரும். வட்டி மேலும் கீழும் சென்றாலும் சராசரியாக 10% நீண்ட கால அடிப்படையில் வரும்.

இது நம்முடைய அசலையும் சேர்த்து 2.5 மடங்கு. 50 லட்சம் ரூபாய்க்கு நாம் 120 லட்சம் ஏறக்குறைய கட்டுவோம். அவ்வளவு வட்டி எதற்கு தரவேண்டும் என்று பலர் 7 முதல் 10 வருடங்களில் கட்டி முடித்துவிடுவார்கள். அப்படியே பழக்கப்பட்டவர்களுக்கு அதிலி ருந்து வெளியே வருவது கடினம். பொதுவாக எல்லோரும் சொல்வது நான் நிறைய வட்டி கட்ட விரும்பவில்லை அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கவேண்டும்.

மேலும் சிலர் எனக்குக் கடன் இருந்தால் சரியாகத் தூக்கம் வராது. ஆனால் அவர்கள் சீக்கிரமாக கட்டி முடித்தவுடன் செய்யும் முதல் காரியம் முந்தைய வீட்டைவிட பெரிய வீடாக வாங்குவது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் EMI என்பது ஒரு போதை! முதல் சில மாதங்களுக்கு கடினமாக இருக்கும், பின்பு பழகிவிடும். நாம் அதிலிருந்து வெளியே வராதபடி நம் வீட்டின் கதவை எதாவது ஒன்று தட்டி கொண்டே இருக்கும்.

முதலீடு என்று வரும்போது நாம் உணர்ச்சிவயப்படக் கூடாது. உணர்ச்சி என்பது நமக்குத் தானே தவிர பணத்திற்கு எப்போதுமே இருந்ததில்லை. உணர்ச்சி இல்லாத பணத்தைக் கையாளும்போது நாமும் முடிந்தவரை உணர்ச்சி வயப்படாமல் இருக்க வேண்டும்.

இன்று எல்லோருக்கும் சவாலான விஷயம் வீட்டுக் கடனை சீக்கிரம் முடிப்பது நல்லதா அல்லது கடைசிவரை கட்டுவதா? நிறைய பேர் ஆலோசனை சொல்வது சீக்கிரம் கட்டுவது நல்லது என்பதே. நமக்கு எதிலாவது சந்தேகம் வந்தால் அதில் சிறிது நேரம் செலவிட்டு,ஒப்பிட்டுப்பார்த்தால் நம்மால் ஓரளவிற்கு தெரிந்து கொள்ள முடியும். இது அப்படிப்பட்டஒரு முயற்சியே. இதில் ஒரே ஒரு கண்டிஷன் உணர்ச்சிவயப்படாமல் இருப்பது!

நாம் அனுமானமாக எடுத்து கொள்வது.

1. 49,919 EMI 2. 10.5% 3. 20 வருடம்
அடுத்தது முன்பணம் கொடுத்தவுடன் குறையக்கூடிய பணத்தை PPFல் முதலீடு செய்வது. 8.7% வட்டி என்பது தற்போதய நிலை. வீட்டுக்கடன் முடிந்தவுடன் அந்த பணத்தை 20 வருடம் வரை PPFல் முதலீட்டை தொடர்வது.
மற்றொன்று அந்த முன்பணத்தை அப்படியே ​மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது. சென்செக்ஸ் கடந்த 34 வருடங்களில் 17% கூட்டுவட்டி கொடுத்துள்ளது. டிவிடெண்டை எடுத்துக்கொண்டால் இன்னும் 2% வரை வரும்.

​மியூச்சுவல் ஃ​பண்ட்​

முதலீடு கடந்த 20 வருடங்களில் நிறைய ஃபண்ட் 20% மேல் கூட்டு வட்டி கொடுத்துள்ளது. அதனால் 15% கூட்டு வட்டி எதிர்பார்ப்பது என்பது ஒரு மிதமான எதிர்பார்ப்பு. உங்களால் அதைகூட நம்பமுடியாது என்றால் 12% எடுத்துகொள்ளுங்கள்.

அட்டவணையைப்பற்றி

ஒருவர் வீட்டுக்கடன் வாங்கிய இரண்டாம் வருடத்தில் இருந்து, ஒவ்வொரு வருடமும் 5லட்சம் முன்பணமாக கட்டுகிறார், 6ஆவது மற்றும் 7ஆவது ஆண்டில் 8 லட்சம், பின்பு கடைசியில் மீதமுள்ள 3.68 லட்சம். 8 வருடத்தில் முடிந்துவிடும். 8 வருடத்தில் அவர் கட்டிய பணம்மொத்தமாக 73.32 லட்சம். இதை செய்பவருக்கு மிக்க மகிழ்ச்சி ஏனெனில் கொஞ்சம்தான் வட்டி கட்டுகிறோம் என்று.
1. பணத்தை வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிக்கு கொடுத்து EMI குறைத்த பணத்தை முதலீடுசெய்யும்போது நமக்கு ஏறக்குறைய 2 கோடி கிடைக்கிறது.
2. அதற்கு பதிலாக அந்த பணத்தை முதலீடு செய்யும்போது 12% கூட்டு வட்டியில் 2.67கோடியும், 15% கூட்டு வட்டியில் 4.08 கோடியும் கிடைக்கிறது.
சாராம்சம்: வீட்டுக்கடன் வட்டி என்பது நமக்கு கிடைக்கும் கடன்களில் மிகக்குறைந்த மற்றும் நீண்ட கால கடன். நீண்ட கால கடன் என்கிறபோது நாம் கட்டக்கூடிய பணமும்அதிகம், அதே சமயம் நமக்கு வருமானமும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்போது நம்மால் கடனை எளிதாக கட்டமுடியும். வருங்காலங்களில் நமக்கு வருமானம் கூடும் என்ற ஒரு நம்பிக்கையில் தான் எல்லோரும் கடன் வாங்குகிறோம் என்பது உண்மை. மேலும் முதலீட்டில் நாம் செய்யும் முதலீட்டின் அளவை விட எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோம் என்பது மிக முக்கியம்.
அட்டவணைப்படி பார்க்கும்போது ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

1.வீட்டுக்கடனை சீக்கிரம் முடிப்பது சரியான ஒரு முடிவு கிடையாது.
2.வீட்டுக்கடன் வாங்கும்போது நமக்கு எவ்வளவு தருகிறார் களோ அவ்வளவு லோன் எடுக்கவேண்டும்.
3.இன்று வீட்டுக் கடன் பொதுவாக 20 ஆண்டுகள். சிலர் 25 ஆண்டுகள் வரை தற்போது கொடுக்கிறார்கள். நாம் எப்போதுமே எவ்வளவு அதிக ஆண்டுகள் நமக்கு தருகிறார்களோ அவ்வளவு எடுத்துக்கொள்வது நல்லது.
4.நான் வீட்டுக் கடனில் கிடைக்ககூடிய சலுகை களை பற்றி இங்கு எடுத்துக்கொள் ளவில்லை. இந்தக் கட்டு ரையின் முயற்சி ஒருவர் வீட்டுக் கடன் வாங்கும்போது அதை சீக்கிரம் கட்டலாமா கூடாதா என்பதே.

வீட்டுக்கடன் சீக்கிரம் முடிப்பது என்பது தவறான முடிவு என்றால் மிகையாகாது!

Monday 10 February 2014

My 20th Article in The Hindu Tamil dated 10th February 2014, About "Investing in Borrowed Money?"

கடன் வாங்கி முதலீடு?

பொதுவாக எல்லோரும் சொல்லக்கூடிய அறிவுரை கடன் வாங்கிய பணத்தை முதலீடு செய்வது தவறு. அதனால்தான் நாம் தனி நபர் கடன் (Personal Loan) வாங்கும்போது கேட்கப்படும் ஒரு கேள்வி, இந்தப் பணத்தை நீங்கள் உங்களுடைய எந்தத் தேவைக்கும் செலவழிக்கலாம். ஆனால் இந்தப் பணத்தைக் கொண்டு எதிலும் முதலீடு செய்யக்கூடாது, ஆனால் அதைக் கண்டு பிடிப்பது கடினம். இருந்தாலும் அவர்கள் இந்தக் கேள்வியை கேட்கத் தவறியதில்லை. பலர் கடன் வாங்கி முதலீடு செய்வதும் உண்டு.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் "கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. கடன் சுமை இருந்தால் நமக்கு நிம்மதியாகத் தூக்கம் வராது. அது தொண்டையில் மாட்டிக்கொண்ட முள் போன்றது. ஒரு நாட்டின் அரசனே கடன் இருந்தால் கலங்குகிறான் என்றால் நாம் எல்லோரும் எம்மாத்திரம்!

முதலீடு என்பது ரிஸ்க்கான விஷயம். அப்படி இருக்கும்போது நாம் வாங்கும் கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அந்த வட்டிக்கு மேல் நமக்கு ரிடர்ன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது நம் கையில் இல்லை. அதனால்தான் அது தவறு என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு என்பது அவர்களின் கனவு, அதை லோனில் வாங்குவதில் தவறில்லை. ஆனால், 2, 3 வீடு என கடனில் வாங்குவது தவறு.

உதாரணமாக நாம் இரண்டாவது வீடு ஒன்று 50 லட்சத்தில் வாங்குகிறோம் என எடுத்துக்கொண்டால் அதற்கு மாதம் 50 ஆயிரம் கட்டவேண்டும். இன்று சராசரியாக Rs. 10,000 தான் நமக்கு கிடைக்கும் வாடகை. 50-10=40. மாதம் 40 ஆயிரம் வீதம் வருடம் 5 லட்சம் கட்டுகிறோம். ஒருவேளை வீடு இன்னும் 5 வருடத்தில் நல்ல விலை ஏறாமல் 65 லட்சம் தான் விலை போகிறது என எடுத்து கொண்டால் நமக்கு 10 லட்சம் நஷ்டம். மேலும் அதில் கிடைக்கும் அணைத்து பணமும் வரி இல்லாமல் நமக்கு கிடைக்காது.

இன்று EMI ல் வாழ்வது என்பது நிறைய பேருக்கு ஒரு போதை மாதிரி. ஒரு EMI முடிந்தால் அடுத்த EMI என மாறி மாறி தங்களை கமிட் செய்து கொள்கிறார்கள். பெற்றோர்களும், அவர்களுடைய பையனோ, பெண்ணோ வேலைக்குச் சேர்ந்தவுடன் ஒரு வீட்டை வாங்கி கடனாளி ஆக்கிவிடுகிறார்கள். பின்பு வீடு வாங்கிவிட்டேன் அதனால் வேலையை விட முடியாது எனக் கடினமாக உழைத்து தங்களுடைய உடல் வலிமையை இழக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது, ஆனால் நம்முடைய சமூக அமைப்பின்படி, படித்தவுடன் வேலைக்குச் சேரவேண்டும் என்பது, இங்கு எழுதப்படாத சட்டம். இதை மாற்றுவது என்பது கடினம், ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயம். இப்படி வேலைக்குச் சேர்ந்தவுடன் கடனில் மாட்டிகொள்ளாவிட்டால், நமக்கு பிடித்த வேலையையோ அல்லது ஒரு சிறு தொழில் முனைவராகவோ ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் ஒருவருடைய திறமையை அறிந்து கொள்ளாமலே போவதற்கு வாய்ப்பு அதிகம். கடந்த 30 ஆண்டுகளில் ஓரளவிற்கு சிலர் அதை உணர்ந்து கொண்டதால்தான் இந்தியா இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. இதில் நிறைய பேர் ஆர்வம் காட்டினால், தான் உயர்வதுடன் நம் நாடும் நலம் பெற வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் நம்முடைய தந்தையை விட நாம் நல்ல வசதியில் இருக்கிறோம், நம்முடைய குழந்தைகள் நம்மை விட கண்டிப்பாக நன்றாக இருக்கும்போது நாம் நமக்காக வாழவேண்டும், நம் குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிறேன் என்று நம் வாழ்வை தொலைத்து விடக்கூடாது. ஆனால் மீண்டும் மீண்டும் கடனில் மாட்டிக்கொண்டு ஒரு வீடு, மற்றொன்று என்று நிறைய பேர் காலம் தள்ளுகிறார்கள்.

ஒருவர் அதிகபட்சமாக ஒரு வீட்டில்தான் வசிக்க முடியும். மேலும் காலத்திற்கு தகுந்த மாதிரி ஒருவருடைய விருப்பம் வேறுபடுகிறது. மேலும் நம் குழந்தைகள் எங்கு வாழப்போகிறார்கள் என்று தெரியாது. தெரியாத இடத்தில் வாழப்போவதற்குத் தெரிந்த இடத்தில் கடன் வாங்கி முதலீடு செய்வது சரியான முயற்சியாக இருக்காது!

மேலும் நாம் முதலீடு செய்யத் தொடங்கும்போது கடந்த கால முதலீட்டை பற்றி மட்டும் சிந்திக்காமல் வரும் காலம் எவ்வாறு இருக்கும் என்றறிந்து முதலீடு செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலோர் முதலீடு செய்யும்போது கடந்த காலத்தில் எது செயல்பட்டதோ அதிலேயே முதலீடு செய்கிறார்கள். அது முடிந்து போன கதை. நடக்கபோவதைப் பற்றி யோசித்து செயல்படவேண்டும்.

உதாரணமாக நீங்கள் ஒரு கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால் டெண்டுல்கரை தேர்வு செய்ய முடியாது. ஏனெனில் அது கடந்த காலம், வரும் காலத்தில் விராத் கோலியை தேர்வு செய்ய வேண்டும். அதே போல நம்முடைய முதலீட்டை மேற்கொள்ளும்போது இருக்கின்ற எல்லா முதலீட் டையும் பற்றி அறிந்து அது வருங்காலங்களில் எவ்வாறு செயல்படும் என்று யோசித்து நாம் முதலீடு செய்ய வேண்டும்.

நாம் பணத்தை நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தரும்போது நான் அவருக்குக் கடன் கொடுத்திருக்கிறேன் என்று அவரைப் பற்றிக் குறைவாகவும் நம்மைப் பற்றி உயர்வாகவும் எண்ணுவோம். அதே சமயம் அந்த பணத்தை வங்கிக்கு கடன் கொடுத்தால் அதற்கு பெயர் டெபாசிட். யாரும் வங்கிக்கு நான் கடன் கொடுத்துள்ளேன் என்று சொல்வதில்லை. மாறாக, அந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளேன் என்று அந்த வங்கியைப் பற்றி உயர்வாகச் சொல்வோம். வங்கி உங்களிடத்தில் கடன் வாங்கியுள்ளது அதற்கு வட்டி தருகிறது அவ்வளவுதான். யாரும் கடன் வாங்கினால் வெளியில் சொல்லுவதற்கு சங்கடப்படுவார்கள். ஆனால் வீட்டுக்கடன் வாங்கும்போது மட்டும் நாம் நம் கடனை பெருமையாக நினைத்துக் கொண்டாடுகிறோம்.

எல்லோரும் வீடு, கடனில் தான் வாங்கி இருக்கிறோம். அதிலும் 2 அல்லது 3 வீடு என்றால் சொல்லிக்கொள்ளவே வேண்டாம். வெளி நாட்டில் யாரும் இந்த மாதிரி கடன் வாங்கி நிறைய வீடுகள் வாங்குவதில்லை.

சாராம்சம்: கடன் வாங்கி முதலீடு செய்வது என்பதை நாம் முதலீடு என்று எண்ணலாமே தவிர அது கண்டிப்பாக முதலீடாகாது. மேலும் ஒரு முதலீட்டை விற்று மற்றொன்றுக்குச் செல்லும்போது, அது வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தேவையான பொருளுடன், கடனில் மாட்டிக்கொள்ளாமல் வாழ்ந்ததால் போன தலைமுறையினர் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இன்று நிறைய பொருள், அதற்குமேல் கடன். ஆனால் மகிழ்ச்சி என்பது இல்லை. எதையோ பறி கொடுத்தவர்போல்தான் பலர் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

இன்று பெரிய பெரிய நிறுவனங்கள் நொடித்து போனதற்கான காரணம், நிறைய கடன் வாங்கி தொழிலை பெருக்குகிறேன் என்று கடனில் மாட்டிகொண்டதுதான். பணத்தை தேடுவதில் வாழ்கையைத் தொலைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் இறந்த பின்பு உங்கள் பெயரிலோ, வங்கியிலோ அதிக பணம் இருந்து பயனில்லை. எந்த ஒரு பொருளும் நமக்கு எளிதாகக் கிடைத்தால் அதற்கு மதிப்பு கிடையாது. நாம் குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பையும் அதனுடைய பயன்பாட்டையும் கற்றுத் தரவேண்டுமே ஒழிய நாம் கஷ்டப்பட்டு பணத்தைத் தருவது அவர்களைக் கெட்ட வழியில் அதிகம் தள்ளுமே தவிர நன்மை பயக்காது.

நாம் வருங்கால சந்ததிக்கு மீன் பிடிக்க கற்று தரவேண்டுமே தவிர, மீனை இலவசமாகத் தரக்கூடாது. கடன் இல்லாமல் சேர்க்கப்படும் செல்வமே உண்மையான செல்வம் என்று சொன்னால் அது மிகையாகாது. கடனை தவிர்ப்போம், தரமான வாழ்வை எதிர்கொள்வோம்.
பி. பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com

Tuesday 4 February 2014

Is Housing Loan Prepayment is a Good Option? Find out...



I have the opinion backed up by data that our housing loan EMI should not prepay and close before the tenure. 

Reasons are

1. Housing Loan is the long term loan and the interests are peanuts.
2. One house is enough for the individual and if they close the loan early then the chances of getting into another loan is very high.

Many Individual try to pre-close the EMI in 5 to 7 years and feel that they are saving good amount of  money not paying to Housing Loan Companies. I have input the data and how it works in a long term!

First of all, it is highly difficult to close it in 5 years, so I took 7 years for argument sake.

I have taken 50L housing loan and the EMI would be 49,919, at the rate of 10.5% and 20 years will be the term.

At the end of every year for the next 5 years, the individual is prepaying 5 Lakhs which itself is not an easy thing to do. In the 6th and 7th Year, it will be 8 Lakhs and beginning of the 8th year whatever 3.68 Lakhs which is left also be paid.

The difference in the EMI will be invested in PPF at the rate of 8.7% as suggested by her.

In other words, the individual is paying 49,919 for the next 20 years and keep reducing the housing loan and keep increasing the PPF. In addition to that from the 2nd year onwards, till 8th year he paid pre-payment around 44,68,926 and generating close to 2 Crore. Instead of prepaying if the same money is invested in a diversified mutual fund, I assumed two scenarios 1. 12% and 2. 15%

Months
EMI
Installments
Interest Paid
Pre Payment
PPF
ROI
Years
Value
No Prepayment
Future Value
1--12
49919
12
599028





Intest Assumption
Intest Assumption
13-24
44479
12
533748
500000
5440
8.70%
19
3,167,927
12.00%
15.00%
INR 4,306,381
INR 7,115,886
25--36
39547
12
474564
500000
4932
8.70%
18
2,576,717
12.00%
15.00%
INR 3,844,983
INR 6,187,727
37--48
34211
12
410532
500000
5336
8.70%
17
2,494,745
12.00%
15.00%
INR 3,433,020
INR 5,380,632
49--60
28756
12
345072
500000
5455
8.70%
16
2,275,680
12.00%
15.00%
INR 3,065,197
INR 4,678,810
61-72
23163
12
277956
500000
5593
8.70%
16
2,333,250
12.00%
15.00%
INR 3,065,197
INR 4,678,810
73-84
13994
12
167928
800000
9169
8.70%
14
3,013,439
12.00%
15.00%
INR 3,909,690
INR 5,660,565
85-96
4532
12
54384
800000
9462
8.70%
13
2,742,362
12.00%
15.00%
INR 3,490,794
INR 4,922,230



2863212
368926
4532
8.70%
13
1,313,505
12.00%
15.00%
INR 1,609,806
INR 2,269,923




4468926
49919


19,917,626


INR 26,725,068
INR 40,894,584
Total Amount Paid



7332138






INR 6,807,442
INR 20,976,957











Sixty Eight Lakhs
Two Crore 10 Lakhs

When the broad-base index itself delivered 17% CAGR for the past 34 years and if you add 1.5% as dividend yield, the very conservative return from the fund in the next 20 years would be 15%.

@12%, he will gain 68 Lakhs additional
@15%, he will gain 2.1 Crore additional

I think, I have not overlooked anything, in case if I have missed out anything, please inform me and I will revisit again.

Conclusion: To me, housing loan should continue till the tenure irrespective of the interest rate, which I keep telling for the past 3 years and I stand by this.