Pages

Monday 28 October 2013

Inflation and Investments? My Fifth Article in Tamil Hindu dated on 28th October 2013

பணவீக்கமும் முதலீடும்



பணவீக்கம் என்பது முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களின் விலை 108 ஆகிவிட்டால், பணவீக்கம் எட்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம்.
பணவீக்கத்தை கணக்கிட இரண்டு முறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன,
1 . மொத்த விற்பனை விலைப் பட்டியல் பணவீக்கம் (Wholesale Price Index Inflation - சுருக்கமாக WPI)
2 . நுகர்வோர் விலைப் பட்டியல் பணவீக்கம் (Consumer Price Index Inflation - சுருக்கமாக CPI)
நமது இந்தியாவில் மொத்த விற்பனை விலைப் பட்டியல் பணவீக்கம் (WPI) முறையை உபயோகப்படுத்துகின்றனர். வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைப் பட்டியல் பணவீக்கம் (CPI) முறையைப் பயன்படுத்துகின்றனர். நாம் பின்பற்றுவது தவறான முறையாகும்.
நாம் முதலீடு செய்யும் பொழுது முக்கியமாக கவனிக்கவேண்டியது, நம்முடைய முதலீடு பணவீக்கத்தை கட்டுப்படுத்துமா இல்லையா என்பதுதான்.
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வைப்பு நிதித் திட்டங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில்லை. மேலும் பணவீக்கத்தின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதையும் பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை. ஒரு வேளை நம்மவர்கள் உணர்ந்திருந்தால் அப்படி உணர்ந்தால் மேலும் மேலும் வைப்பு நிதித் திட்டத்தில் மக்கள் பணத்தை போட மாட்டார்கள். மார்ச் 31, 2012ல் வைப்பு நிதி இந்தியா முழுவதும் ரூ. 64 லட்சம், கோடி!
மாதம் ரூ.10,000 செலவு செய்யும் குடும்பத்திற்கு பணவீக்கம் 8% ஆனால், அடுத்த வருடம் செலவிற்கு ரூ.10,800 அதாவது ரூ. 800 கூடுதலாகத் தேவைப்படும். இது இல்லாதவர்கள் எப்படிச் சமாளிப்பது என்கிறீர்களா? இரண்டே வழிகள்தான். ஒன்று, வாங்கும் அளவைக் குறைத்துக்கொள்வது (கோபப்படாதீர்கள்). அல்லது கடன் வாங்குவது (இதற்கு மேல் யார் தருவார் என்கிறீர்களா!).
மேற்சொன்ன ஒரு குடும்பத்தின் மாதாந்திர செலவு 10,000 ரூபாய் என்பது ஒரு முப்பது வயதுடைய ஆண் என எடுத்து கொண்டால் அவருடைய 60 வயதில் (ஓய்வு காலத்தில்) அந்த 10,000 ரூபாய், 8% பணவீக்கத்தில் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள், மூச்சை பிடித்து கொள்ளுங்கள், அதிகமில்லை வெறும் 1,00,626 ரூபாய்! மாதா மாதம் 1,00,626 ரூபாய் வேண்டும் என்றால் நம்முடைய கணக்கில் குறைந்தது ரூ. 1.5 கோடி நம்மிடம் இருக்க வேண்டும்.
அதே போல இன்று பொறியியல் படிப்பிற்கு வருடம் 1.5 லட்சம் வரை ஆகிறது. மொத்தமாக 6 லட்சம். இன்று குழந்தைக்கு 3 வயது என எடுத்துக்கொண்டால் இன்னும் 15 ஆண்டு கழித்து அதாவது குழந்தையின் 18 வயதில் தேவைப்படும் தொகை 19 லட்சம் ரூபாய். இதைக்கண்டு நாம் பயப்படத்தேவை இல்லை, நாம் இன்றே சேமிக்க தொடங்கினால். இதே மாதிரி இன்று ஒரு திருமனத்திற்கு ஆகும் செலவை 15 லட்சம் என்று எடுத்துக்கொண்டால் 8% பணவீக்கத்தில் இன்னும் 20 வருடங்களில் அதே தொகை 70 லட்சம் ரூபாய். இந்த உதாரணங்கள் உங்களை அச்சுறுத்துவதற்காக இல்லை, நீங்கள் அறிந்து கொள்வதற்கே!
நிறைய முதலீட்டாளர்கள் இதைப் புரிந்தது கொள்ளாமல் நான் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்துள்ளேன் அது எனக்கு கை கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான எண்டோமென்ட் பாலிசி நாம் கட்டும் பிரீமியத்தை போல இன்னொரு மடங்கு தான் கொடுக்கிறார்கள். அது கொஞ்சம் கூட பத்தாது. உதாரணமாக 20 வருடங்களில் 2 முதல் 2.25 மடங்கு அதிகரிக்கும். ஒருவர் 5,000 ரூபாய், ஆண்டுதோறும் கட்டினால் அவருக்கு பாலிசியின் முதிர்வின் போது 2.25 லட்ச ரூபாய்தான் கிடைக்கும், அந்த தொகை 8% பணவீக்கமாக எடுத்துக்கொண்டால் அதனுடைய இன்றைய மதிப்பு வெறும் 48,273 ரூபாய் தான்.
எந்த ஒரு வைப்பு திட்டத்திலும் நமக்கு நிரந்தர வருமானம் தான் கிடைக்கிறது, ஆனால் நம்முடைய பணவீக்கமோ ஆண்டுக்கு ஆண்டு கூட்டு வட்டியில் ஏறுகிறது. 5 அல்லது 6 ஆண்டுகளில் நாம் நம்முடைய முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். மேலும் மருத்துவத்தின் வளர்ச்சியினால் நாம் 80 வயது வரை வாழக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
மேலும் ரிஸ்க் என்பது எவ்வளவு காலம் என்பதை பொருத்தது. ஒரு டம்ளர் கிளாஸ் கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்தால் கை வலிக்காது அதுவே ஒரு நாள் என்றால் கை வலி வந்துவிடும். அதே போல ஓரிரு வருடங்கள் என்றால் நாம் வைப்பு நிதி திட்டங்களை அணுகலாம். அதுவே 10 முதல் 15 வருடம் என்றால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கும் முதலீட்டு திட்டங்களை நோக்கிச் செல்லலாம்.
பணத்தை முதலீடு செய்யும் பொழுது நீங்கள் ஒரே ஒரு கேள்வியை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள், இந்த முதலீடு நம்முடைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துமா என்று கேட்டுக்கொள்ளுங்கள். பாதுகாப்பானது என்று நினைத்து மட்டும் முதலீடு செய்ய வேண்டாம்.
இன்று நாம் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள இணையம் இருக்கிறது. எந்த ஒரு முதலீடு என்றாலும் அதைப் பற்றி சிறிது அறிந்து கொண்டு செய்வது நல்லது. ஆனால் எல்லோரும் அந்த முகவர் இதைச் சொன்னார், இவர் அதைச் சொன்னார் என்றால் இழப்பு என்னவோ நமக்குத்தான். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும் போது கொஞ்சம் பொறுப்போடு இருக்கவேண்டும்.
பி.பத்மநாபன் - தொடர்புக்கு: padmanaban@fortuneplanners.com

Saturday 26 October 2013

My Financial Planning Article Appeared in Today's Naanayam Vikatan

நிதி நிர்வாகம் தந்த நிம்மதி !
சறுக்கலை சரிசெய்த  சவாலான நிதித் திட்டமிடல்!

''மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு டாக்டர் என்னிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார். அவர் பெயர் நரசிம்மன் (40 வயது), மிகவும் பிரபலமான டாக்டர். அவர் மனைவியின் பெயர் ரஞ்சனி (35 வயது). அவர்களுக்கு அகிலா
(8 வயது), கண்ணன் (6 வயது) என இரண்டு குழந்தைகள்.
நரசிம்மனுக்கு கிளினிக்கில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரும். தவிர, ஆபரேஷன் செய்வதன் மூலம் 50,000 ரூபாய் வரை கிடைக்கும். அவருக்கு தெரிந்த முதலீடு என்றால் ரியல் எஸ்டேட் ஒன்றுதான். நகரின் பல பகுதிகளில் நிறைய இடங்களை வாங்கிப்போட்டிருக்கிறார். கொஞ்ச பணம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும், கொஞ்ச பணம் பேங்க் டெபாசிட்டிலும் போட்டு வருகிறார்.
நிதி ஆலோசகரை அணுகுதல்!
சரியான நிதி ஆலோசகரை அணுகி  ஆலோசனை பெற்றுக்கொள்ளாமல், அவராகவே தனக்கு தெரிந்த அளவில் சேமிப்பு, முதலீடு என்பவற்றை செய்து வந்துள்ளார். பின்னர் அது சரிவராது என்று தோன்றவே என்னைத் தேடி வந்திருக்கிறார். 'நான் சொல்லும் ஆலோசனை களை நீங்கள் பின்பற்றுவதில் சீரியஸாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். ''ஆமாம்'' என்ற பிறகே அவருக்கு ஆலோசனை தர முடிவெடுத்தேன். ''உங்கள் நிதி தொடர்பான தகவல்களைத் தரமுடியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர், ''அந்த டீடெய்ல்ஸ் எல்லாம் என் அசிஸ்டென்ட் உங்களுக்குத் தருவார்'' என்றார்.  இப்படித்தான் பலரும் அவர்களின் மிக முக்கியமான விஷயங்களைக்கூட கவனிக்க நேரமில்லாமல் வருமானம் ஈட்டுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்கள். பணத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாமலும், முடியாமலும் போவதற்கு இந்தக் குணநலன்களும் காரணமாக அமைந்து விடுகின்றன.
''உங்கள் மனைவிக்கும் சில கனவுகள் இருக்கும். அதேபோல, உங்கள் குழந்தைகளுக்கும் சில ஆசைகள் இருக்கும். நிதித் திட்டமிடல் என்பது குடும்பத்தில் உள்ள எல்லோருடைய தேவைகள் மற்றும் அவரவர்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் எதிர்காலத் திட்டம்தான். அதனால்தான் உங்கள் மனைவி யையும் குழந்தையையும் வீட்டில் இருக்கச் சொல்கிறேன்!'' என்று விளக்கம் தந்தேன். அவருடைய நிதி சார்ந்த விவரங்களையும் எதிர்காலத் தேவைகளையும் என்னிடம் கொடுக்க  கிட்டத்தட்ட ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டார் அவர்.
பாதுகாப்பு!
''நான் இன்ஷூரன்ஸுக்கு மட்டும் ஆண்டுக்கு 4.8 லட்சம் ரூபாய் பிரீமியம் கட்டுகிறேன். அதுல நான் எந்தக் குறையும் வைக்கவில்லை'' என்று பெருமையாகச் சொன்னார். ''எவ்வளவு பணம் கட்டுகிறீர்கள் என்பது முக்கியமில்லை, எவ்வளவு கவரேஜ், அதாவது நாம் நாளை இல்லாமல் போனால் நம்முடைய குடும்பத்துக்கு என்ன பணம் கிடைக்கும் என்பதே முக்கியம். நீங்கள் மாதம் 1.5 லட்சம் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் மனைவி ஓர் இல்லத்தரசி. அவர்கள் வேலைக்குச் செல்லவில்லை. உங்களுடைய பாலிசியில் வெறும் 20 லட்சம்தான் கிடைக்கும். அதை வங்கியில் போட்டால் மாதம் வட்டி வருமானம் அதிகபட்சமாக 20,000 ரூபாய்தான் கிடைக்கும். எனவே, தேவையற்ற பாலிசியைத் தவிர்த்து, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் நல்லது'' என்று விளக்கிச் சொன்னவுடன் டேர்ம் இன்ஷூரன்ஸின் அவசியம் பற்றி புரிந்துகொண்டார். கையில் இருக்கும் சேமிப்பைப் பயன்படுத்தி தேவையான அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுத்துக்கொண்டார்.
மெடிக்ளைம் பாலிசி!
எவ்வளவு லட்சம் ரூபாய்க்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்துள்ளீர்கள் என்றதற்கு, ''நான் டாக்டர். நான் எதற்கு மெடிக்ளைம் பாலிசி எடுக்க வேண்டும்?'' என்று கேட்டார். உடனே, ''நீங்கள் டாக்டர் என்றால் உங்களுக்கு நோய் எதுவும் வராதா?'' என்று கேட்டேன். ''வரும், வந்தால் நான் பார்த்துக்கொள்வேன்'' என்றார். ''சின்னச் சின்ன வியாதி என்றால் ஓகே; பெரிய நோய் என்றால் நிறைய பணம் தேவைப்படுமே!'' என்று விளக்கமாக நான் எடுத்துச் சொன்னபிறகே, மெடிக்ளைம் பாலிசியை எடுக்க ஒப்புக்கொண்டார்.
நீண்ட கால இலக்குகள்!
சுமார் நான்கு மணி நேரம் அவரோடு பேசி முடித்த பிறகு அவர்களுடைய இலக்குகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டேன்.
* சொந்தமாக  கிளினிக் ஒன்று அவர் வசிக்கும் நகரத்தில் இன்னும் 5 வருடத்தில் தொடங்க வேண்டும். அதை முதலில் சில உள்ளூர் டாக்டர்களை வைத்து நடத்த வேண்டும். தனது 60 வயதில் அங்கு செட்டில் ஆகி அங்குதான் சர்வீஸ் செய்ய வேண்டும்.
 60 வயதில் ரிட்டையர் ஆகவேண்டும், அப்பொழுது கையில் குறைந்தது 3 கோடி ரூபாய் வேண்டும்,
 ரஞ்சனி இன்னும் 6 வருடத்தில் ஏழை குழந்தை களுக்கு கட்டணம் வாங்காமல் பாட்டு சொல்லித் தரவேண்டும், அதற்கு வீட்டின் மாடியில் ஒரு பெரிய அறை ஒன்று கட்ட வேண்டும்.
 அகிலாவுக்கு பாட்டில் ஈடுபாடு இருப்பதால் அவளை பெரிய கர்நாடகப் பாடகியாக ஆக்க வேண்டும்.
 கண்ணனை ஒரு சிறந்த கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து அவனை இந்தியாவுக்கு விளையாட வைக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக செலவை எப்படி கட்டுப்படுத்துவது என்று கேட்டார். வருகிற வருமானத்தை வீணாகச் செலவழிக்காமல் முறையாக முதலீடு செய்ய கற்றுத் தந்தேன். முதலீடுகளை ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்யச் சொன்னேன்.
சீரான வாழ்க்கை, சிறப்பான முதலீடு!  
உங்களுடைய இலக்குகளில் உங்களுடைய பெண் பெரிய பாடகி ஆகவும், உங்கள் மகன் பெரிய கிரிக்கெட்டர் ஆகவும் நாம் முயற்சிக்க லாம். இருப்பினும் அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு டிகிரி படிப்பு தேவை என்பதால், அதற்காக முதலீட்டை மேற்கொள்வதும், அவர்களின் திருமணத்துக்கான முதலீட்டை செய்வதும் அவசியமல்லவா என்பதை அவரிடம் கேட்டதற்கு ''ஆமாம்'' என்றார். ஆக, அதற்காக முதலீட்டையும் நீங்கள் செய்ய வேண்டும் என்றால், செய்கிற முதலீட்டில் ஒழுக்கம் அவசியம் என்றேன்.
அதேபோல, உங்களுடைய கிளினிக், ரிட்டையர்மென்ட் பணம் மற்றும் உங்களுடைய மனைவியின் சங்கீதப் பள்ளி ஆகியவையும் கண்டிப்பாக நிறைவேறும் வகையில் முதலீடுகளைச் செய்யுங்கள் என்று அனைத்து தேவைகளுக்குமான முதலீட்டை ஏற்படுத்தித் தந்தேன்.  
இன்றைய நிலையில் சிறப்பாக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் செய்தி ருக்கும் முதலீட்டுத் திட்டங்களும் அவர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்கி வருகிறது. வருடா வருடம் போர்ட்ஃபோலியோ ரிவியூவிற்கு ஜூன் மாதம் ஒன்றாம் தேதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இன்று அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கூடியுள்ளது. குடும்பத்துக்காக நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள். நேரம் கிடைக்கும்போது நரசிம்மனே தன் மகனை கிரிக்கெட் பயிற்சிக்கும், பெண்ணை பாட்டு வகுப்புக்கும் அழைத்துச் செல்கிறார். ஓய்வு நேரத்தில் மனைவியைப் பாடச் சொல்லி கேட்கிறார். பெண் நன்றாகப் பாடுகிறாள், நிறைய போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்கிறாள். அடுத்த வருடம் பெண்ணுக்கு பாட்டு அரங்கேற்றம் செய்ய போகிறார்கள். முதலீடுகளை இலக்கிற்கேற்ப மியூச்சுவல் ஃபண்டு, ஷேர், வங்கி டெபாசிட் என பிரித்து முதலீடு செய்து, நிம்மதியாக இருக்கிறார்கள். அதுதானே அவர்களின் தேவை!

Monday 21 October 2013

All About Financial Planing - My Fourth Article on The Hindu Tamil Dated on 21st October 2013



நிதி திட்டமிடல் - பி. பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01625/tax_jpg_1625847h.jpg

இன்று நாம் பரவலாக கேட்கப்படுகிற ஒரு பெயர் பைனான்சியல் பிளானிங். நிறைய பணம் உள்ளவருக்கு மட்டும்தான் இது தேவை என்ற பரவலான ஒரு கருத்து உள்ளது. ஆனால் அது உண்மை அல்ல.

வாழ்ந்து கெட்ட குடும்பங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒருவர் சரியான வழியில் தம்முடைய நிதியைத் திட்டமிட்டுக்கொண்டால் இது போன்ற பெயர் கிடைக்க வாய்ப்பே இல்லை. நிதி நடவடிக்கைகள் ஒரு சிறந்த ஆலோசகரின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்போது அவருடைய தரம் தானாக உயரும்.

நிதி திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்று. இன்று நம்முடைய ஆசைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஒருவருக்கு ஆசை எது, தேவைகள் எது என கண்டு கொள்ள முடிவதில்லை.

எனவே நமக்கு அவற்றை அறிந்து வழிநடத்த ஒரு நிதி ஆலோசகரின் உதவி தேவைப்படுகிறது.

நிதி ஆலோசகர்கள் நம்முடைய குடும்பத்தில் ஒருவர், அவர் நம்முடைய வாழ்க்கையில் நம்மோடு நீண்ட காலம் பயணம் செய்யப் போகிறவர் எனவே நாம் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நிதி திட்டமிடல் என்பது ஆறு படிகள் கொண்டது
1. ஒருவரைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் பல்வேறு கேள்விகளைக் கேட்பதன் மூலம் கண்டறிவது.
2. ஒருவருடைய குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்கு.
3. தற்போதய நிதி நிலமை மற்றும் அவருடைய முதலீடு, மேலும் அவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மை முதலியவற்றை அறிந்து கொள்வது,
4. இலக்குக்கு ஏற்றார் போல முதலீட்டைத் தேர்தெடுப்பது.
5. ஒரு நிதித்திட்டம் தயார் செய்து அதைச் செயல்படுத்துவது.
6. அந்தத் திட்டம், இலக்குக்குத் தகுந்தபடி செயல்படுகிறதா என்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனிப்பது.

பெரும்பாலோர் சரியாக திட்டம் தீட்டுவார்கள் அல்லது நிதி ஆலோசகரிடம் திட்டத்தை வாங்கிக்கொள்வார்கள். ஆனால் திட்டம் போடும் போது இருக்கும் ஆர்வம் அதை செயல்படுத்தும் போது இல்லை, இதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது. செயலிலும், அதை கண்காணித்தலிலுமே ஒருவருடைய வெற்றி உள்ளது.

முதல் இரண்டு வருடங்களில் ஒருவருடைய நிதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கே நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. ஒரு வருடத்திற்கு பின்பே அவருக்கு எது தேவை எது தேவை இல்லை என்று கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கும்.

சிலர் விளையாட்டாக கேட்பார்கள் நாம் திட்டம் போட்டால் மட்டும் 100% நடக்குமா என்று? திட்டம் போட்டே ஒரு விஷயம் சரியாக நடக்கவில்லை என்று நினைத்தால், திட்டம் போடாமல் இருக்கும் போது எப்படி சரியாக இருக்க முடியும்.

மொபைல், டிவி மற்றும் இன்டர்நெட் மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திட்டங்களைக் கேட்க நேரிடுகிறது. இந்த மாதிரி விஷயங்களை நிதி ஆலோசகரிடம் விடுவதால் நாம் தப்பாக எதுவும் வாங்க முடியாது.

நம்முடைய பெற்றோர்களுக்கு நிதி திட்டமிடல் பற்றி எதுவும் தெரியாது அப்படி இருந்தும் அவர்கள் பெரும்பாலான இலக்கை அடைந்தார்கள், இப்பொழுது மட்டும் என்ன என்ற ஒரு கேள்வியும் பலருக்கு உள்ளது.

நம் பெற்றோர்கள் தேவை இல்லாமல் எதையும் வாங்கியது இல்லை, அதேபோல சமூகத்துக்காக மற்றவர்களுக்காகவும் வாங்கியதில்லை.

இன்றைய அவசர வாழ்க்கையில் ஒருவருக்கு எல்லா விதமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. மேலும் முந்தைய கால நிதி திட்டங்கள் பெரும்பாலும் பணவீக்கத்தைக் கூடக் கட்டுப்படுத்த முடியாததால் நாம் இன்றைய உலகின் புதிய நிதித் திட்டங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. இதை ஒரு நிதி ஆலோசகரிடம் விட்டுவிடுவதால் அவர் அதை சரிவர கண்காணிக்கிறார்.

இன்று நாம் EMI கலாசாரத்தில் வாழ்கிறோம். நாம் நமக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்கிறோம். மேலும் பொருளைக் கையகப்படுத்துவதில் முனைவதால் எவ்வளவு சம்பாதித்தும் போதவில்லை. எனக்கு தெரிந்த ஒருவர் கணவன் மனைவி இருவரும் ஏறக்குறைய மாதம் ரூ. 2.5 லட்சம் சம்பாதிக்கிறார்கள், இருந்தும் அவர்களால் ரூ. 20,000 க்கு மேல் சேமிக்க முடியவில்லை. ஏனெனில் அவரை வழிநடத்த யாரும் இல்லாததே. இதற்கு முக்கியக் காரணம், பணத்தை எப்படிக் கையாள்வது என்று யாருக்கும் பள்ளிக் கூடத்திலோ அல்லது வீட்டிலோ சொல்லித் தருவதில்லை.

இன்னும் சிறிது வருடங்களில் குடும்ப மருத்துவர் என்பது போல குடும்ப நிதி ஆலோசகர் என்று ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tuesday 8 October 2013

ICICI Pru Value Fund Series 1

Those who missed IDFC Small cap closed ended fund 6 months before, get an another opportunity to enter this time with ICICI Pru Value Fund.
Generally, Mutual funds are classified as Large cap, Midcap and Small cap. If you look at the performance between 2003 and 2013, large cap delivered 21.81%, Midcap as 25.14% and Small cap as 24.24% CAGR.
If we split these 10 years into 2 half, first half is a bull market and 2nd half is the bearish or volatile market.
In the bull phase, large cap delivered 48.9%, Midcap as 59.94% and Small cap as 74.67% CAGR. If you look at the percentage, you will not appreciate much, but if you look at the multiples large cap multiplied by 5.7 times, Midcap as 8.4 times and Small cap as whopping 13.34 times!
If you look at the indices for the past 5 years, Large indexes are slightly positive, but Small cap index absolute return is more than -24.97% and Midcap is -20%, itself is a very big Opportunity!
Small Cap
Indices Value
Percentage
1-Jan-08
7452

7-Oct-13
5591


Difference
-24.97%
Mid Cap


1-Jan-08
7197

7-Oct-13
5757


Difference
-20.01%
Sensex


1-Jan-08
19580
95.53%
7-Oct-13
19895


Difference
1.61%
Why One Should Invest This Fund?
1.     For any 8 years rolling return of Sensex only two instances it gave negative returns of -1.06% and -0.84% out of 27, two is negative.
          If we go little deeper, in those two periods, before 5 years SENSEX has multiplied by 5 times and 4.5 times. In our case, we are at the same level. So there is no possibility of coming down in the next 3 years, for sure.
2.     If you look at the elections year between 1991 and 2009 where 6 elections held, of which 5 times the market has given very good return after the elections and the only one occasion it was not given because the previous 5 years was also a bull market.
3.     When the markets turns from bear to bull the value stock will do extremely well, one such occasion we have witnessed in the calendar year 2009, ICICI Pru Discovery one of the value fund in the market has delivered 128% in a single year which means your 1 Lakh investment becomes 2,28,000.
4.     Many investors are not happy today with 3 years lock-in because of many funds which came around 2007-2008 at peak delivered poor returns. At the same time, in the bearish market this will work exactly opposite, because you will not be allowed to take money and at the same time fund manager can invest in a value fund without worrying the redemption pressure.
5.     This fund looks like miniature of discovery fund and this fund also going to Manage Mr. Shankar Naren who managed ICICI Pru Discovery Fund before along with Mr. Mittul Kalawadia.
6.     Today, the value of the index may be at same level or 25% discount, but if you look at the individual stock most of the stocks are available for more than 50% discount. If anybody regularly following the market will understand we are heading towards BIG bullish market.
7.     If you believe in the next 5 years, small cap will do better than other caps then there is an opportunity available right now.
8.     ICICI Pru Mutual Fund has come out with ICICI Pru Value Fund, which is a closed ended 3 years fund with dividend payout option only.
9.     Personally, I believe small and midcap cap will do in the next 3 to 5 years and many small cap funds are available currently in the market, all are open ended. The problem with the open ended fund is, there will be regular redemption pressure and regular inflow also and good numbers of funds are already beaten.
10.                         Being a closed ended fund, as an investor we have nothing to do in between, so they have provided only dividend payout wherein, he will book profit and give it as divided. Hopefully, we will get our investment as dividend itself during the period of 3 years.
11.                         Since, it is a closed ended fund, no SIP allowed. The lump sum can be as low as Rs. 5000 and the upper side is unlimited.
12.                         The fund is going to use the Benchmark Index of BSE500 which is a broad based index.

Monday 7 October 2013

Which is the Best Life Insurance Policy? - My 3rd Article in The Hindu (Tamil Version) dated on 7th October 2013!

ஆயுள்காப்பீட்டில் சிறந்த பாலிசி எது?

பா. பத்மநாபன் 



ஆயுள் காப்பீடு என்பது சில துரதிர்ஷ்டசாலிகளை அதிர்ஷ்டசாலிகள் பலர் பாதுகாப்பதாகும். இதன் மூலம் நாம் முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்கிறோம். இதுவும் ஒரு வகையான சேவை போன்றதுதான்.
இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள். காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.
மேலும் இன்சூரன்ஸ் ஒரு நீண்ட கால கமிட்மெண்ட். நாம் இடையில் வெளியேற முடியாது. உதாரணமாக இது 20 முதல் 25 வருட பிளான். நமக்கு கிடைப்பதோ 5.5% முதல் 6% வரை தான். இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. முன்பே சொன்ன மாதிரி இன்ஷூரன்ஸ் என்பது நம்முடைய ரிஸ்க்கினை மற்றவருக்கு மாற்றுவதே.
பொதுவாக மக்களுக்கு ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே பாதுகாப்பு என்ற எண்ணமும், மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அந்த அளவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. அது மிகவும் தவறானது ஏனென்றால் எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை.
நிறைய பேருக்கு நம்மிடம் தான் போதுமான பணம் உள்ளதே எதற்கு நமக்கு இன்சூரன்ஸ் என்ற கேள்வி உள்ளது. அதற்கான பதில் இது தான்.
ஒரு வேளை நாம் இறந்தால், நம்முடைய குடும்பம் தற்போழுது உள்ள நிலையிலே இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நிதிச் சிக்கலில் இருந்து விடுபட நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
இன்று பெரும்பாலானவர்கள் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் தேவையான இன்சூரன்ஸ் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. மேலும் பலருக்கு எவ்வளவு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. சிலர் 5 பாலிசிகள் கூட வைத்திருப்பார்கள், ஆனால் போதுமான தொகைக்கு எடுத்திருக்க மாட்டார்கள். இன்ஷூரன்ஸில் பல வகை உள்ளது. மிகவும் பிரபலமானது என்றால் அது எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் மணிபேக் பாலிசி. இது நீண்ட கால பிளான் 20 முதல் 25 வருடம் வரை. ஆனால் வட்டி குறைவு மேலும் சரண்டர் செய்தால் நாம் நிறைய பணம் இழக்க வேண்டி வரும்.
உதாரணமாக நம்முடைய காலில் சிறிய கட்டி வந்தவுடன் அதை அப்புறப்படுத்தாமல் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றால் காலையே எடுக்கவேண்டி வரும். முதலிலே இந்த மாதிரி எண்டோவ்மென்ட் பாலிசியை புரிந்து கொண்டால் சரண்டர் செய்வது நல்லது. தெரிந்தும் 20 வருடம் கட்டுவது காலை இழப்பதற்குச் சமமாகும்.
பணத்தை இழக்க விரும்பாமல் 20 வருடம் கட்டிய பின்பு வரும் தொகை மிகக் குறைவு. எனவே இந்த மாதிரி பாலிசியைத் (traditional) தவிர்ப்பது நல்லது.
அடுத்ததாக ULIP பாலிசி இது. இது பங்குச் சந்தையின் போக்கிற்கேற்ப நம்முதலீடு இறங்குவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாலிசியில் ப்ரீமியம் அதிகம் ஆனால் லைப் இன்ஷுரன்ஸ் கவரேஜ் குறைவு. இதையும் தவிர்ப்பது நல்லது.
பின்பு எதுதான் நல்ல பாலிசி என்கிறீர்களா? டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி தான்.
உதாரணமாக ஒருவருக்கு 30 வயது என்று எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு 60 வயது வரை கவர் செய்யக்குடிய டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியில் ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுக்கும்பட்சத்தில், பிரீமியமாக 18,000 ருபாய் செலுத்தினால் போதும்.
தற்போழுது ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் வந்து விட்டது. இதற்கு முகவர்கள் உதவ மாட்டார்கள். நாமே எல்லாவிதமான கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல வேண்டும். இது பெரும்பாலும் விஷயம் தெரிந்தவர்களுக்கு பயன்படும். பொதுவாக ஒருவருடைய வருட சம்பளத்தில் 12 முதல் 15 மடங்கு அளவுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவர் வருடம் 5 லட்சம் சம்பாதித்தால் அவர் 60 முதல் 75 லட்சம் வரை டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது.
பிரீமியம் குறைவு என்றவுடன் எல்லோரும் ஒ.கே. என்று சொல்லுவீர்கள், பின்பு நீங்கள் உயிரோடு இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று சொன்னால் எனக்கு இந்த பாலிசி வேண்டாம் என உடனே சொல்லிவிடுவார்கள். இது தவறு. சரியான பாலிசியை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்வது நல்லது.
பா.பத்மநாபன் - padmanaban@fortuneplanners.com