Pages

Monday 30 September 2013

My First Article Appeared In The Hindu (Tamil Version) Today 30th September 2013




முதலீடு செய்வது எப்படி? - பி. பத்மநாபன்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01601/money_jpg_1601895h.jpg

மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலீடு செய்வதற்கு முன்பு உங்களை பற்றிய தகவல்களை (கே.ஒய்.சி) கொடுத்தாக வேண்டும். உங்களுடைய போட்டோ, நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு), முகவரி சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் போதும். ஒரு முறை கே.ஒய்.சி. கொடுத்துவிட்டால் போதும், அதன்பிறகு எத்தனை ஃபண்ட்களில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம்.

முதலாவது மொத்த முதலீடு. அதாவது ஒரு ஃபண்டில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்வது. இந்த முறையில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது (செக் கொடுக்க வேண்டும்) முதலீடு செய்ய வேண்டும். 5000 ரூபாய்க்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இன்னொரு வாய்ப்பு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மெண்ட் பிளான். ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது.

செய்த முதலீட்டை ஒரு வருடத்துக்கு முன்பாக எடுக்கும் பட்சத்தில் கிடைக்கும் தொகையில் ஒரு சதவிகிதம் வெளியேறும் கட்டணம் செலுத்தியாக வேண்டும். ஒரு வருடத்துக்கு பிறகு எடுக்கும் போது வெளியேறும் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.

மேலும், ஒரு வருடத்துக்கு முன்பு வெளியே எடுக்கும் பட்சத்தில் 15 சதவிகித நீண்ட மூலதன ஆதாய வரி செலுத்தியாக வேண்டும். உதாரணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், கிடைக்கும் 30,000 ரூபாய்க்கு 15 சதவிகித வரி அதாவது 4500 ரூபாய் ஆதாய வரி கட்ட வேண்டி இருக்கும். ஒரு வேளை நீங்கள் முதலீடு செய்திருப்பது பங்குச்சந்தை சார்ந்த ஃபண்டாக இருக்கும் போது ஒரு வருடத்துக்கு பிறகு முதலீட்டை திருப்பி எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தத் தேவை இல்லை.

குரோத் (வளர்ச்சி) மற்றும் டிவிடெண்ட் (ஈவுத் தொகை) என இரண்டு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் எதுவுமே தேர்வு செய்யவில்லை என்றால் தானாக குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்யப்படும். டிவிடெண்டில் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப லாபத்தை எடுத்துக் கொடுப்பார்கள். பெரும்பாலும் இந்த வாய்ப்பை ஓய்வு பெற்றவர்கள் தான் தேர்வு செய்கிறார்கள்.

யாரை அணுகுவது?
கடந்த 9 மாதங்களாக நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகம் சென்று முதலீடு செய்யமுடியும். ஆனால் உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நேரடியாக முதலீடு செய்யும்போது 0.50 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தலாம் என்றாலும், உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு வேளை தவறான ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில் அதிகளவு நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் முறையான நிதி ஆலோசகரை நாடுவது நல்லது.

நிதி ஆலோசகர் சந்தையை தொடந்து கவனித்துவருவார். மேலும் உங்களுடைய மொத்த முதலீடு எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுவார். மேலும் உங்களுக்கு தேவையான சேவைகளையும் தருவார்.

சில பொதுவான தவறுகள்.!
பெரும்பாலானவர்கள் குறைந்த என்.ஏ.வி. (அதாவது ஒரு யூனிட்டின் மதிப்பு) பண்டில் முதலீடு செய்வது நல்லது என்று நினைக்கிறார்கள். என்.ஏ.வி. குறைவாக இருப்பது முக்கியமல்ல. வருமானம் தான் முக்கியம்.

உங்களது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்துவிட்டு முதலீட்டின் மதிப்பு குறைகிறது என்று மற்ற முதலீடுகளுடன் ஒப்பிட்டு, முதலீட்டை வெளியே எடுப்பதும் தவறு. அதேபோல முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்கும் போது உடனேயே எடுத்துவிடுவதும் தவறு.

How To Invest? - My Second Article in The Hindu Tamil Version Today (30th September 2013)

முதலீடு செய்வது எப்படி?

பி. பத்மநாபன்
 

மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்ப்போம்.
முதலீடு செய்வதற்கு முன்பு உங்களை பற்றிய தகவல்களை (கே.ஒய்.சி) கொடுத்தாக வேண்டும். உங்களுடைய போட்டோ, நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு), முகவரி சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் போதும். ஒரு முறை கே.ஒய்.சி. கொடுத்துவிட்டால் போதும், அதன்பிறகு எத்தனை ஃபண்ட்களில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம்.
முதலாவது மொத்த முதலீடு. அதாவது ஒரு ஃபண்டில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்வது. இந்த முறையில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 5,000 ரூபாயாவது (செக் கொடுக்க வேண்டும்) முதலீடு செய்ய வேண்டும். 5000 ரூபாய்க்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இன்னொரு வாய்ப்பு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மெண்ட் பிளான். ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது.
செய்த முதலீட்டை ஒரு வருடத்துக்கு முன்பாக எடுக்கும் பட்சத்தில் கிடைக்கும் தொகையில் ஒரு சதவிகிதம் வெளியேறும் கட்டணம் செலுத்தியாக வேண்டும். ஒரு வருடத்துக்கு பிறகு எடுக்கும் போது வெளியேறும் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.
மேலும், ஒரு வருடத்துக்கு முன்பு வெளியே எடுக்கும் பட்சத்தில் 15 சதவிகித நீண்ட மூலதன ஆதாய வரி செலுத்தியாக வேண்டும். உதாரணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் 30,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், கிடைக்கும் 30,000 ரூபாய்க்கு 15 சதவிகித வரி அதாவது 4500 ரூபாய் ஆதாய வரி கட்ட வேண்டி இருக்கும். ஒரு வேளை நீங்கள் முதலீடு செய்திருப்பது பங்குச்சந்தை சார்ந்த ஃபண்டாக இருக்கும் போது ஒரு வருடத்துக்கு பிறகு முதலீட்டை திருப்பி எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தத் தேவை இல்லை.
குரோத் (வளர்ச்சி) மற்றும் டிவிடெண்ட் (ஈவுத் தொகை) என இரண்டு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் எதுவுமே தேர்வு செய்யவில்லை என்றால் தானாக குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்யப்படும். டிவிடெண்டில் சந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப லாபத்தை எடுத்துக் கொடுப்பார்கள். பெரும்பாலும் இந்த வாய்ப்பை ஓய்வு பெற்றவர்கள் தான் தேர்வு செய்கிறார்கள்.
யாரை அணுகுவது?
கடந்த 9 மாதங்களாக நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகம் சென்று முதலீடு செய்யமுடியும். ஆனால் உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நேரடியாக முதலீடு செய்யும்போது 0.50 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தலாம் என்றாலும், உங்களுக்கு உதவ யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு வேளை தவறான ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில் அதிகளவு நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் முறையான நிதி ஆலோசகரை நாடுவது நல்லது.
நிதி ஆலோசகர் சந்தையை தொடந்து கவனித்துவருவார். மேலும் உங்களுடைய மொத்த முதலீடு எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுவார். மேலும் உங்களுக்கு தேவையான சேவைகளையும் தருவார்.
சில பொதுவான தவறுகள்.!
பெரும்பாலானவர்கள் குறைந்த என்.ஏ.வி. (அதாவது ஒரு யூனிட்டின் மதிப்பு) பண்டில் முதலீடு செய்வது நல்லது என்று நினைக்கிறார்கள். என்.ஏ.வி. குறைவாக இருப்பது முக்கியமல்ல. வருமானம் தான் முக்கியம்.
உங்களது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்துவிட்டு முதலீட்டின் மதிப்பு குறைகிறது என்று மற்ற முதலீடுகளுடன் ஒப்பிட்டு, முதலீட்டை வெளியே எடுப்பதும் தவறு. அதேபோல முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்கும் போது உடனேயே எடுத்துவிடுவதும் தவறு.
பி.பத்மநாபன் - padhu73@gmail.com/padmanaban@fortuneplanners.com

Monday 23 September 2013

ABC's About Mutual Funds - My First Article Appeared in Tamil Hindu dated on 23rd September 2013



மியூச்சுவல் ஃபண்ட் - எளிய மனிதர்களுக்கான எளிய திட்டம்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01594/fund_jpeg_1594393h.jpg

ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் (நிச்சயமற்ற தன்மையின் விளைவுகளை எதிர்கொள்வது) இருக்கிறது. அதில் முதலீடு செய்யப்படும் அனைவருக்கும் ஒரே ரிஸ்க் தான். உதாரணத்துக்கு வைப்பு நிதியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில் கிடைக்கும் லாபம் அனைவருக்கும் ஒன்றுதான். அதே போல எதாவது ரிஸ்க் என்றாலும் அனைவருக்கும் ஒன்றுதான். இதே போலத்தான், பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் என பல வகையான முதலீடுகள் இருந்தாலும் அதில் இருக்கும் ரிஸ்க்கின் அளவு கிட்டத்தட்ட அனைவருக்கும் சமமாகதான் இருக்கும். ஆனால் உங்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.
ரிஸ்கே எடுக்க வேண்டாம், குறைந்த வருமானம் போதும் என்று நீங்கள் நினைத்தாலும் அதற்கேற்ற முதலீட்டுத்திட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருக்கிறது. அதிக ரிஸ்க், மிக அதிக ரிஸ்க் என, உங்களின் ரிஸ்க் அளவிற்கு ஏற்றதுபோல இங்கு முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், வெளிநாட்டில் வர்த்தகமாகும் சொத்துகள்/பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் வழி இருக்கிறது. இதைத் தாண்டியும் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல வழிகளில் சாதாரண மக்களின் முதலீட்டுக்கு ஏற்றதாகவே இருக்கிறது.
முதலீட்டு முறை:
ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை மற்றும் தங்கம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய மாதம் 500 ரூபாய் கூட போதும். (சில ஃபண்ட்களில் மாதம் 100 ரூபாய் கூட முதலீடு செய்யலாம்). உங்கள் வசதிக்கு ஏற்ற தேதியில் இ.சி.எஸ். கொடுத்துவிட்டால் போதும், தானாக முதலீடு செய்யப்பட்டுவிடும். இதற்கு ’’சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்”(எஸ்.ஐ.பி.) என்று சொல்லுவார்கள். அதேபோல சில வருடங்களுக்கு முதலீடு செய்தபிறகு, முதலீடு செய்த தொகையை ஒவ்வொரு மாதமும் திரும்ப வாங்கிக்கொள்ளலாம்.
குறைந்த ரிஸ்க் அதிக வருமானம்!
வங்கி வைப்புத்தொகையில் முதலீடு செய்யும் போது 9 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும். ஆனால் பங்குச்சந்தை அதிக லாபம் வர வாய்ப்பு இருக்கிற அதே சமயத்தில் அதிக நஷ்டமும் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொஞ்சம் அதிக பணம் தேவை. அப்படியே கொஞ்சம் பணம் இருந்தாலும் அந்த பணத்தை ஒரு பங்குகளிலோ அல்லது இரண்டு பங்குகளிலோதான் முதலீடு செய்ய முடியும். இது ரிஸ்க்கான விளையாட்டு. இதில் ஒரு பங்கு சரிவடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் இந்த ரிஸ்க் கிடையாது. ஒரு ஃபண்டில் திரட்டப்படும் தொகையை சுமார் 50 பங்குகளில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒரு சில பங்களில் நஷ்டத்தை கொடுத்தாலும் பெரிய சரிவு வர வாய்ப்பு இல்லை. கடந்த ஐந்தாண்டுகளைப் பார்க்கும் போது சில ஃபண்ட்கள் அபரிமிதமான வருமானத்தை கொடுத்திருந்தாலும், 12 சதவிகித வருமானத்துக்கு மேலே கொடுத்திருக்கும் ஃபண்ட்கள் சந்தையில் நிறையவே இருக்கின்றன. (அதற்கான இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு எந்தவிதமான உத்தரவாத வருமானமும் கிடையாது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்)
வரிச்சலுகை
மாதச் சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று வரி கட்டுவது. குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவர்களின்பாடு திண்டாட்டம்தான். வரி சேமிப்புக்கு என்றே தனியாக மியூச்சுவல் ஃபண்ட்கள் இருக்கின்றன. 80சி பிரிவின் கீழ் ஒரு நிதிஆண்டுக்கு அதிகபட்சம் 1லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யமுடியும். (புதிய நேரடி வரிவிதிப்பு முறை வரும் போது இந்த திட்டம் இருக்காது என்று சொல்லப்படுகிறது, ஆனால் இன்னும் அந்த சட்டம் அமல்படுத்தபடவில்லை)இந்த முதலீட்டினை மூன்று வருடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். சந்தையில் இருக்கும் மற்ற வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும் போது இந்த காலம் மிக குறைவு.
விரைவில் பணம்!
இதில் முதலீடு செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். (சில திட்டங்களுக்கு ’’லாக் இன்” காலம் இருக்கிறது, அது முடிந்த பிறகு எப்போது வேண்டுமானாலும்) இதற்கான விண்ணப்பத்தை கொடுத்த இரண்டு வேலை நாட்களில் பணம் கிடைத்துவிடும்.
சேமிப்பை பற்றி கொஞ்சம் யோசிக்கலாமே!