Pages

Sunday 30 October 2011

My Second Financial Planning Article in Naanayam Vikatan on 30th October 2011

நேற்று... இன்று... நாளை!
 
குடும்ப நிதி ஆலோசனை

இன்னும் சில மாதங்களில் குழந்தைக்குத் தாயாகப் போகும் சந்தோஷத்துடனும், குடும்பத்தின் மீதுள்ள அக்கறையுடனும் நம்மிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார், சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வரும் அனுராதா (வயது 31). எதிர்காலத்தில் தன் குடும்பத்தைச் சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் நிதி ஆலோசனை கேட்டு வந்த இந்தப் பெண் வாசகர் நிச்சயம் வரவேற்புக்குரியவர்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவரது மாதச் சம்பளம் 80,000 ரூபாய். கணவர் ராஜசேகரின் மாதச் சம்பளம் 41,000 ரூபாய். இதுதவிர, இன்னும் சில மாதங்களில் வீட்டு வாடகையின் மூலம் 4,000 ரூபாய் வருமானம் வரப் போகிறது.  
''மதுரையில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு; சென்னையில் வசித்துவரும் வீட்டின் மதிப்பு 35 லட்சம் ரூபாய். மதுரையில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 21 சென்ட் மனை; திருப்பூரில் 10 லட்சம் மதிப்புள்ள 17 சென்ட் நிலம் என சொத்துக்கள் இருந்தும் கடன்களும் அதிகம்''  என்றவர், கடன்களை சொன்னார்.
அனுராதாவின் பெயரில் 28 லட்சம், கணவர் ராஜசேகர் பெயரில் 13 லட்ச ரூபாய் என  மொத்தம் 41 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன். ராஜசேகர் பெயரில் தனிப்பட்ட கடன் 2 லட்ச ரூபாயும், இருவரது  பெயரிலும் 10 லட்ச ரூபாய் நகைக் கடனும் இருக்கிறது.    
''முதலில் கடனை ஒழித்துக் கட்ட வேண்டும். குழந்தைக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கல்விச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
திருமணத்திற்கு 25 லட்ச ரூபாய் தேவை. 5 லட்ச ரூபாயில் கார் வாங்க வேண்டும்; ஓய்வு காலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருமானம் வருகிற மாதிரி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் நிதி ஆலோசனை சொல்ல வேண்டும்'' என்றார்.
இந்தக் குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்த நிதி ஆலோசகர் பத்மநாபன் விரிவான ஆலோசனையைத் தந்தார்.
''நிறைய வருமானம் வர்றப்ப நிறைய கடன் வாங்கத் தோணும். அந்த சிக்கல்தான் அனுராதாவுக்கும். கவலைப் படாதீங்க, கொஞ்சம் கஷ்டப்பட்டா கடன் தொல்லையில இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம்.  

கடன் அடைக்க..!
''ராஜசேகர் பேர்ல 13 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் இருக்கு. இதுக்காக மாதம் இ.எம்.ஐ. 13,000 ரூபாய் கட்டிட்டு வர்றாரு.
இந்தக் கடனை 2025-ம் ஆண்டு வரைக்கும் கட்டணும். அனுராதா தன் பேருல 28 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்காங்க. இதுக்காக மாதம் 38,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்றாங்க. தொடர்ந்து 10 வருஷம் இ.எம்.ஐ. கட்டினால் தான்  கடன் முடியும். பத்து வருஷம் கட்ற வீட்டுக் கடனை 20 வருஷம் வரைக்கும் கட்டுற மாதிரி வச்சுக்கிட்டா, ஒவ்வொரு மாசமும் 28 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இப்படி மிச்சமாகிற 10,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த பத்து ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 2021-ல் 27.52 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த 27.52 லட்சத்தை 10 வருடங்களுக்கு 15% வருமானம் தருகிற  ஈக்விட்டி ஃபண்டில் போட வேண்டும். அதே சமயத்தில் வீட்டுக் கடன் தவணைக்கு 28,426 ரூபாயை மேலே போடப்பட்ட ஃபண்டிலிருந்து மாதாமாதம் எடுத்துக் கட்டி கடனை அடைத்து விடலாம். மீதி இருக்கிற வருமானம் அப்படியே தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2031-ல் கிடைக்கக்கூடிய தொகை 43 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்தப் பணத்தை எடுத்து, அடுத்த அஞ்சு வருஷம் 12% வருமானம் தரக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அதாவது 2036-ல் கிடைக்கக்கூடிய தொகை 75.76 லட்சம் ரூபாய்.
இதன் மூலம் மாதம் 75,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இந்தப் பணத்தை  ஓய்வுக் காலத்துக்குப் பயன்படுத்திக்கலாம்.
இதுதவிர, 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடனும், தனிப்பட்ட கடன் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் வச்சிருக்காங்க. தனிப்பட்ட கடனுக்காக மாதம் 6,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு. இதுபோக 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் வாங்கி வச்சிருக்காங்க. இதுக்காக மாதம் 10,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. ஏற்கெனவே இருக்கிற மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சரண்டர் செய்றதால 7,500 ரூபாய் பிரீமியத் தொகை மிச்ச மாகும். இதிலிருந்து புதுசாக  டேர்ம் பாலிசி தலா 1 கோடி ரூபாய்க்கு எடுத்து மாத பிரீமியம் 3,000 கட்ட வேண்டும். மீதி உள்ள 4,500 ரூபாயுடன் தற்போதைய சேமிப்பான 16,000 ரூபாயிலிருந்து முதலீட்டுக்காக ஒதுக்கியிருக்குற 9,500 போக, பாக்கி இருக்குற 6,500 ரூபாயையும் சேர்த்து 11,000 ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை நகைக் கடன் இ.எம்.ஐ. கட்ட பயன்படுத்திக்கலாம்.
இன்னும் ஒரு வருஷத்துல இந்த நகைக் கடனை அடைக்கணும்னு சொல்றாங்க அனுராதா. இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்றதால 1.80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இன்னும் மூணு மாசத்துல கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டு வச்சிருக்கிற 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இவை தவிர, கையிருப்பா ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். இந்த வருஷம் கிடைக்குற போனஸ் பணம், கைக்கு வெளியே இருந்து கொஞ்சம் காசு வரணும்னு சொல்றாங்க. ஆக, எல்லாப் பணத்தையும் சேர்த்து அடுத்த ஒரு வருஷத்துல நகைக் கடனை நிச்சயமா அடைச்சுடலாம்.''

லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
''அனுராதா தன் பேர்லயும் தன் கணவர் ராஜசேகர் பேர்லயும் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வச்சிருக்காங்க. இதுக்காக வருஷம் 90,000 ரூபாய் பிரீமியம் கட்டி வர்றாங்க.  இவங்க கட்ற பிரீமியத் தொகைக்கு கிடைக்கக்கூடிய கவரேஜ் வெறும் ஏழு லட்சம் ரூபாய்தான். அதனால், இதில் ஒரு பாலிசியை சரண்டர் செய்தால், 75,000 சர்வைவல் பெனிஃபிட் மற்றும் 25,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்கும். இந்த ஒரு லட்சம் ரூபாயை கார் வாங்கறதுக்கு முன் பணமாக பயன்படுத்திக்கிட்டு, மீதி 4 லட்சம் ரூபாய்க்கு கார் லோன் வாங்கிக்கலாம். இதுக்காக மாதம் 10,300 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டிவரும். இன்னும் ஒரு வருஷத்துல நகைக் கடன் முடிஞ்சுடும்ங்கறதால நகைக் கடனுக்காக கட்டிட்டு வந்த இ.எம்.ஐ. 11,000 ரூபாயை கார் லோன் இ.எம்ஐ-க்கு பயன்படுத் திக்கலாம்.
ஏற்கெனவே எடுத்து வச்சிருக்குற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்யுறதுக்கு முன்னாடி தன் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 16,300 ரூபாய்), ராஜசேகர் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு இன்னொரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 19,700 ரூபாய்) எடுக்க வேண்டும்.
அனுராதாவும் அவர் கணவரும் தனியா மெடிக்ளைம் எதுவும் எடுத்து வச்சுக்காம அலுவலகத்துல மட்டுமே எடுத்து வச்சிருக்காங்க. ஒருவேளை அந்த அலுவலகத்தை விட்டு வந்துட்டா, அந்த பாலிசியால பிரயோஜனமில்லை.  எனவே, குழந்தை பொறந்ததுக்கு பிறகு தனியா மூன்று  லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்து வச்சுக்குறது நல்லது. இதுக்காக வருடம் 6,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்''
குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்துக்கு..!
குழந்தையின் கல்லூரி செலவுக்காக இன்னும் 18 வருஷம் கழிச்சு 25 லட்சம் ரூபாய் வரை வேணும்னு சொன்னாங்க அனுராதா.
அதனால, இன்றிலிருந்து மாசம் 2,500 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 18 வருஷம் முதலீடு பண்ணிட்டு வந்தா, முதிர்வின்போது 27.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்த வச்சு நல்ல முறையில கல்வியை குடுக்க முடியும்.
24 வருஷம் கழிச்சு செய்யப் போற கல்யாணத்துக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறாங்க. இதுக்காக மாசம் 1,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 24 வருஷம் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதிர்வின்போது 28.18 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதை வச்சு கல்யாணத்தை அமர்க்களமா செஞ்சு முடிச்சிடலாம்.
வெளிநாடுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற அனுராதாவின் ஆசைக்கு மாதம் 6,000 வீதம் 5 வருடத்திற்கு 12 % வருமானம் தரும் பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.  
ஓய்வு காலத்துக்கு..!
அனுராதாவும், ராஜசேகரும் 56 வயசுல ரிட்டையர் ஆக ஆசைப்படுறாங்க. ஓய்வு காலத்துல மாசம் 50,000 ரூபாய் வருமானம் போதும்னாங்க. ஆனா, இன்னும் 25 வருஷம் கழிச்சு பார்க்கும் போது 50,000 ரூபாயை வச்சுகிட்டு குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாது. குறைந்தது 1 லட்சமாவது தேவைப்படும். இதுக்காக மாதம் 5,000 ரூபாயை 12% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 25 வருஷம் முதலீடு செய்துட்டு வந்தா, ஆண்டு கடைசியில 83.63 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை 12% வருமானம் கிடைக்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இத்துடன் வீட்டுக் கடனை மாற்றி அமைக்கும் விதத்தில் மேலும் 75,000 ரூபாய் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஓய்வு காலத்தில் சந்தோஷமாகவே வாழலாம்!  இவர்களுக்கு மேலும் சில வருடங்கள் கழித்து கடன்கள் எல்லாம் முடிந்து சேமிப்பு கூடும்போது நிதித் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கை இன்னும் மேம்படும்.

My Second

நேற்று... இன்று... நாளை!
 
குடும்ப நிதி ஆலோசனை

இன்னும் சில மாதங்களில் குழந்தைக்குத் தாயாகப் போகும் சந்தோஷத்துடனும், குடும்பத்தின் மீதுள்ள அக்கறையுடனும் நம்மிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார், சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வரும் அனுராதா (வயது 31). எதிர்காலத்தில் தன் குடும்பத்தைச் சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் நிதி ஆலோசனை கேட்டு வந்த இந்தப் பெண் வாசகர் நிச்சயம் வரவேற்புக்குரியவர்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவரது மாதச் சம்பளம் 80,000 ரூபாய். கணவர் ராஜசேகரின் மாதச் சம்பளம் 41,000 ரூபாய். இதுதவிர, இன்னும் சில மாதங்களில் வீட்டு வாடகையின் மூலம் 4,000 ரூபாய் வருமானம் வரப் போகிறது.  
''மதுரையில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு; சென்னையில் வசித்துவரும் வீட்டின் மதிப்பு 35 லட்சம் ரூபாய். மதுரையில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 21 சென்ட் மனை; திருப்பூரில் 10 லட்சம் மதிப்புள்ள 17 சென்ட் நிலம் என சொத்துக்கள் இருந்தும் கடன்களும் அதிகம்''  என்றவர், கடன்களை சொன்னார்.
அனுராதாவின் பெயரில் 28 லட்சம், கணவர் ராஜசேகர் பெயரில் 13 லட்ச ரூபாய் என  மொத்தம் 41 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன். ராஜசேகர் பெயரில் தனிப்பட்ட கடன் 2 லட்ச ரூபாயும், இருவரது  பெயரிலும் 10 லட்ச ரூபாய் நகைக் கடனும் இருக்கிறது.    
''முதலில் கடனை ஒழித்துக் கட்ட வேண்டும். குழந்தைக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கல்விச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
திருமணத்திற்கு 25 லட்ச ரூபாய் தேவை. 5 லட்ச ரூபாயில் கார் வாங்க வேண்டும்; ஓய்வு காலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருமானம் வருகிற மாதிரி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் நிதி ஆலோசனை சொல்ல வேண்டும்'' என்றார்.
இந்தக் குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்த நிதி ஆலோசகர் பத்மநாபன் விரிவான ஆலோசனையைத் தந்தார்.
''நிறைய வருமானம் வர்றப்ப நிறைய கடன் வாங்கத் தோணும். அந்த சிக்கல்தான் அனுராதாவுக்கும். கவலைப் படாதீங்க, கொஞ்சம் கஷ்டப்பட்டா கடன் தொல்லையில இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம்.  

கடன் அடைக்க..!
''ராஜசேகர் பேர்ல 13 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் இருக்கு. இதுக்காக மாதம் இ.எம்.ஐ. 13,000 ரூபாய் கட்டிட்டு வர்றாரு.
இந்தக் கடனை 2025-ம் ஆண்டு வரைக்கும் கட்டணும். அனுராதா தன் பேருல 28 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்காங்க. இதுக்காக மாதம் 38,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்றாங்க. தொடர்ந்து 10 வருஷம் இ.எம்.ஐ. கட்டினால் தான்  கடன் முடியும். பத்து வருஷம் கட்ற வீட்டுக் கடனை 20 வருஷம் வரைக்கும் கட்டுற மாதிரி வச்சுக்கிட்டா, ஒவ்வொரு மாசமும் 28 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இப்படி மிச்சமாகிற 10,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த பத்து ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 2021-ல் 27.52 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த 27.52 லட்சத்தை 10 வருடங்களுக்கு 15% வருமானம் தருகிற  ஈக்விட்டி ஃபண்டில் போட வேண்டும். அதே சமயத்தில் வீட்டுக் கடன் தவணைக்கு 28,426 ரூபாயை மேலே போடப்பட்ட ஃபண்டிலிருந்து மாதாமாதம் எடுத்துக் கட்டி கடனை அடைத்து விடலாம். மீதி இருக்கிற வருமானம் அப்படியே தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2031-ல் கிடைக்கக்கூடிய தொகை 43 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்தப் பணத்தை எடுத்து, அடுத்த அஞ்சு வருஷம் 12% வருமானம் தரக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அதாவது 2036-ல் கிடைக்கக்கூடிய தொகை 75.76 லட்சம் ரூபாய்.
இதன் மூலம் மாதம் 75,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இந்தப் பணத்தை  ஓய்வுக் காலத்துக்குப் பயன்படுத்திக்கலாம்.
இதுதவிர, 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடனும், தனிப்பட்ட கடன் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் வச்சிருக்காங்க. தனிப்பட்ட கடனுக்காக மாதம் 6,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு. இதுபோக 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் வாங்கி வச்சிருக்காங்க. இதுக்காக மாதம் 10,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. ஏற்கெனவே இருக்கிற மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சரண்டர் செய்றதால 7,500 ரூபாய் பிரீமியத் தொகை மிச்ச மாகும். இதிலிருந்து புதுசாக  டேர்ம் பாலிசி தலா 1 கோடி ரூபாய்க்கு எடுத்து மாத பிரீமியம் 3,000 கட்ட வேண்டும். மீதி உள்ள 4,500 ரூபாயுடன் தற்போதைய சேமிப்பான 16,000 ரூபாயிலிருந்து முதலீட்டுக்காக ஒதுக்கியிருக்குற 9,500 போக, பாக்கி இருக்குற 6,500 ரூபாயையும் சேர்த்து 11,000 ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை நகைக் கடன் இ.எம்.ஐ. கட்ட பயன்படுத்திக்கலாம்.
இன்னும் ஒரு வருஷத்துல இந்த நகைக் கடனை அடைக்கணும்னு சொல்றாங்க அனுராதா. இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்றதால 1.80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இன்னும் மூணு மாசத்துல கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டு வச்சிருக்கிற 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இவை தவிர, கையிருப்பா ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். இந்த வருஷம் கிடைக்குற போனஸ் பணம், கைக்கு வெளியே இருந்து கொஞ்சம் காசு வரணும்னு சொல்றாங்க. ஆக, எல்லாப் பணத்தையும் சேர்த்து அடுத்த ஒரு வருஷத்துல நகைக் கடனை நிச்சயமா அடைச்சுடலாம்.''

லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
''அனுராதா தன் பேர்லயும் தன் கணவர் ராஜசேகர் பேர்லயும் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வச்சிருக்காங்க. இதுக்காக வருஷம் 90,000 ரூபாய் பிரீமியம் கட்டி வர்றாங்க.  இவங்க கட்ற பிரீமியத் தொகைக்கு கிடைக்கக்கூடிய கவரேஜ் வெறும் ஏழு லட்சம் ரூபாய்தான். அதனால், இதில் ஒரு பாலிசியை சரண்டர் செய்தால், 75,000 சர்வைவல் பெனிஃபிட் மற்றும் 25,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்கும். இந்த ஒரு லட்சம் ரூபாயை கார் வாங்கறதுக்கு முன் பணமாக பயன்படுத்திக்கிட்டு, மீதி 4 லட்சம் ரூபாய்க்கு கார் லோன் வாங்கிக்கலாம். இதுக்காக மாதம் 10,300 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டிவரும். இன்னும் ஒரு வருஷத்துல நகைக் கடன் முடிஞ்சுடும்ங்கறதால நகைக் கடனுக்காக கட்டிட்டு வந்த இ.எம்.ஐ. 11,000 ரூபாயை கார் லோன் இ.எம்ஐ-க்கு பயன்படுத் திக்கலாம்.
ஏற்கெனவே எடுத்து வச்சிருக்குற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்யுறதுக்கு முன்னாடி தன் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 16,300 ரூபாய்), ராஜசேகர் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு இன்னொரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 19,700 ரூபாய்) எடுக்க வேண்டும்.
அனுராதாவும் அவர் கணவரும் தனியா மெடிக்ளைம் எதுவும் எடுத்து வச்சுக்காம அலுவலகத்துல மட்டுமே எடுத்து வச்சிருக்காங்க. ஒருவேளை அந்த அலுவலகத்தை விட்டு வந்துட்டா, அந்த பாலிசியால பிரயோஜனமில்லை.  எனவே, குழந்தை பொறந்ததுக்கு பிறகு தனியா மூன்று  லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்து வச்சுக்குறது நல்லது. இதுக்காக வருடம் 6,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்''
குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்துக்கு..!
குழந்தையின் கல்லூரி செலவுக்காக இன்னும் 18 வருஷம் கழிச்சு 25 லட்சம் ரூபாய் வரை வேணும்னு சொன்னாங்க அனுராதா.
அதனால, இன்றிலிருந்து மாசம் 2,500 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 18 வருஷம் முதலீடு பண்ணிட்டு வந்தா, முதிர்வின்போது 27.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்த வச்சு நல்ல முறையில கல்வியை குடுக்க முடியும்.
24 வருஷம் கழிச்சு செய்யப் போற கல்யாணத்துக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறாங்க. இதுக்காக மாசம் 1,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 24 வருஷம் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதிர்வின்போது 28.18 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இதை வச்சு கல்யாணத்தை அமர்க்களமா செஞ்சு முடிச்சிடலாம்.
வெளிநாடுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற அனுராதாவின் ஆசைக்கு மாதம் 6,000 வீதம் 5 வருடத்திற்கு 12 % வருமானம் தரும் பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.  
ஓய்வு காலத்துக்கு..!
அனுராதாவும், ராஜசேகரும் 56 வயசுல ரிட்டையர் ஆக ஆசைப்படுறாங்க. ஓய்வு காலத்துல மாசம் 50,000 ரூபாய் வருமானம் போதும்னாங்க. ஆனா, இன்னும் 25 வருஷம் கழிச்சு பார்க்கும் போது 50,000 ரூபாயை வச்சுகிட்டு குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாது. குறைந்தது 1 லட்சமாவது தேவைப்படும். இதுக்காக மாதம் 5,000 ரூபாயை 12% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 25 வருஷம் முதலீடு செய்துட்டு வந்தா, ஆண்டு கடைசியில 83.63 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை 12% வருமானம் கிடைக்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இத்துடன் வீட்டுக் கடனை மாற்றி அமைக்கும் விதத்தில் மேலும் 75,000 ரூபாய் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஓய்வு காலத்தில் சந்தோஷமாகவே வாழலாம்!  இவர்களுக்கு மேலும் சில வருடங்கள் கழித்து கடன்கள் எல்லாம் முடிந்து சேமிப்பு கூடும்போது நிதித் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கை இன்னும் மேம்படும்.

Sunday 9 October 2011

My First Financial Planning Article in Naanayam Vikatan on 9th October 2011

நேற்று... இன்று... நாளை! 
குடும்ப நிதி ஆலோசனை
''எதிர்காலத்துல என் புள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்கணும்ங்கறது என் ஆசை கிடையாது. என்னால முடிஞ்ச வரைக்கும் கடன்படாம ரெண்டு குழந்தைகளையும் நல்லா படிக்க வைக்கணும். இதுதான் என் லட்சியம்'' என்று தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார், சுரேஷ்ராஜ் (வயது 29). இவரது மனைவி விமலா (வயது 29), குழந்தைகள் ஜனனி (வயது 6) மற்றும் ராகுல் (வயது 3) மூவரும் பெங்களூருவில் வசித்து வர, சுரேஷ்ராஜ் மட்டும் மும்பையில் அரசாங்க உத்யோகத்தில் இருக்கிறார்.
இவரது மாதச் சம்பளத்தில் பிடித்தம் போக கைக்கு வருவது 15,000 ரூபாய். ஓய்வு நேரத்தில் உழைப்பதன் மூலம் மாதம் 1,500 ரூபாய் சம்பாதிக்கிறார். மனைவி விமலா குழந்தைகளை பொறுப் பாகக் கவனித்துக் கொண்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறார். இவருக்கு மாதச் சம்பளம் 6,000 ரூபாய். ஆக, இவர்களது மொத்த மாதச் சம்பளம் 22,500 ரூபாய். ஜனனி பெங்களூருவில் தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறாள்.
'தர்மபுரியில ஊத்தங்கரை பக்கத்துல இருக்கிற பெரியதல் லப்பாடி என் சொந்த ஊரு. பத்து வருஷத்துக்கு முன்னாடி பெங்களூருவில இருக்குற ஆட்டோமொபைல் கம்பெனியில  வேலைக்குச் சேர்ந்தேன். அரசாங்க உத்யோகஸ்தனாகணும் அப்படிங்கறதுதான் என்னோட ஆசை. அதனால வேலை செஞ்சுகிட்டே படிச்சு அரசாங்க உத்யோகத்துக்கான பரிட்சை எழுதினேன். நான் பட்ட கஷ்டம் வீண் போகலை. மூணு வருஷத்துக்கு முன்னாடி மும்பை  ரயில்வே துறையில வேலைக்கு வந்து சேரச் சொன்னாங்க. இப்ப கடவுள் புண்ணியத்துல மனைவி, குழந்தைகள்னு சந்தோஷமா இருக்கோம். ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா, மும்பையில இருந்து மனைவி குழந்தைகளை மூணு மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பார்த்துட்டுப் போக முடியுது'' என்றவர், அடுத்து தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டார்.
''சொத்துன்னு பார்த்தா சொந்த ஊருல இருக்குற வீடு மட்டும்தான். கிராமம்ங்கறதால இப்ப அந்த வீட்டை வித்தாகூட 1.75 லட்ச ரூபாய்க்குதான் போகும். மனைவியோட தங்க நகை 13 சவரன் இருக்கும். சம்பாதிக்கற பணம் இப்ப செஞ்சுட்டு வற்ற சேமிப்புக்கும், செலவுக்குமே சரியா போயிடுது. எதிர்காலத்துக்கு சேமிக்கணும்னா என்ன செய்யுறதுன்னே தெரியல'' என்றார்.
''ஜனனியை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கணும். இன்னும் 12 வருஷம் கழிச்சு படிப்புச் செலவுக்கு 10 லட்சம் ரூபாயாவது தேவைப்படும். ராகுலை பி.இ. படிக்க வைக்கணும்; இதுக்கு 15 வருஷம் கழிச்சு
20 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஜனனிக்கு 25 வயசுல கல்யாணம் பண்ணனும். இதுக்கு இன்னும் 19 வருஷம் இருக்கு. அதுக்குள்ள 20 லட்சம் ரூபாயை எப்படியாவது புரட்டணும்.
ராகுலுக்கு 27 வயசுல கல்யாணம் பண்றப்ப, எங்களுக்கு அதிகம் செலவாகாதுங்கிறதால அஞ்சு லட்சம் ரூபாய் இருந்தாப் போதும். பெங்களூருவில அஞ்சு வருஷத்துக்குள்ள எப்படியாவது ஃபிளாட் வாங்கிடணும். இப்ப வாங்கணும்னா 15 லட்சம் தேவைப்படும். அஞ்சு வருஷம்ங்கற போது குறைந்த பட்சம் 25 லட்சமாவது தேவைப் படும். அப்புறம் என்னோட ஓய்வு காலத்துல மாதம் 12,000 ரூபாய் வருமானம் வந்தால் நானும் என் மனைவியும் புள்ளைங் களுக்கு தொந்தரவு தராம சிக்கனமா குடும்பத்த நடத்திக் குவோம்'' என்று எதிர்காலத் தேவைகளை விளக்கமாகச் சொல்லி முடித்தார்.
இவரது குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்து ஆலோசனை சொல்லத் தயாரானார் சென்னையைச் சேர்ந்த குடும்ப நிதி ஆலோசகர் பத்மநாபன்.
''சிக்கனமாகச் செலவு செய்து கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார் சுரேஷ்ராஜ். இவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எதிர்காலத்துக்கான சிந்தனை யுடன் இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்'' என்றவர், எதிர்கால பாதுகாப்பிற்காக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சொன்னார்.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்..!
''சுரேஷ்ராஜ் எதிர்கால பாதுகாப்பு கருதி ஜீவன் சரல் மற்றும் இரண்டு பென்ஷன் பிளான்களை எடுத்து வைத்திருக் கிறார். இதற்காக மாதம் 4,400 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்து விடுவது நல்லது. டேர்ம் இன்ஷூரன்ஸுக்கு வருடம் 5,400 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டிவரும். இது தவிர, தனக்கும் மனைவி விமலா மற்றும் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வருடம் 8,400 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி வரும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும்'' என்றவர், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு எப்படி முதலீடு செய்வது என்பதை விளக்கினார்.
மகளின் கல்வி, திருமணத்துக்கு..!
''சுரேஷ்ராஜின் உறவினர்கள் எல்லோரும் அரசாங்க பதவியில் இருப்பதால் அவர்களுக்கு மத்தியில் தனது மகள் ஜனனியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்கிறார். 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் (எஸ்.ஐ.பி. முறையில்) மாதம் தோறும் 2,000 ரூபாய் வீதம் 11 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால், முடிவில் 6.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு முன்னதாக ஏதேனுமொரு பட்டப் படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்பதால் கல்லூரி கட்டணத்திற்குக் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைத்திருக்கும் இந்த 6.5 லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மீதி இருக்கும் 1.5 லட்சத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 2,000 ரூபாயை முதலீடு செய்து வந்தால், ஐ.ஏ.எஸ். பயிற்சிக்குத் தேவையான மீதி ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்துவிடும்.
அவசரத் தேவைக்காக 50,000 ரூபாயில் இரண்டு சீட்டுகளை போட்டு வைத்திருக்கிறார் சுரேஷ்ராஜ். இதற்காக சீட்டு ஒன்றுக்கு மாதம் 2,000 ரூபாய் கட்டி வருகிறார். ஒரு சீட்டு ஆரம்பித்து 12 மாதமும் மற்றொரு சீட்டு ஆரம்பித்து 2 மாதமும்தான் ஆகியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய 50,000 ரூபாய் சீட்டிலிருந்து விலகிவிட்டு மற்றொரு சீட்டை தொடர்ந்து சேமித்து வருவது அவசரத் தேவைக்குப் போதுமானது.
ஓராண்டுக்குள் இந்த சீட்டு முடிந்ததும் 2,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் 18 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் 20 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஜனனிக்கு 25 வயதில் திருமணம் செய்ய தேவைப்படும் 20 லட்சத்திற்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.

ராகுலின் கல்வி, திருமணத்திற்கு..!
''ராகுலை பி.இ. படிக்க வைக்க 20 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறார். நீண்ட காலத்தில் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 3,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்து வருவதன் மூலம் கல்லூரி படிப்புக்குத் தேவையான முழுப் பணமும் கிடைத்துவிடும். இதை பயன்படுத்தி ராகுலை நல்ல பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கலாம்.
ராகுல் தன்னுடய 22 வயதில் பி.இ. பட்டதாரியாகி இருப்பார். அதன் பிறகு ராகுல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். இந்த பணத்தை வேறெந்த விஷயத்திற்கும் பயன்படுத்தாமல் ராகுலின் திருமணத்திற்கென்று ஐந்து ஆண்டுகள் சேமித்து வருவதன் மூலம் ராகுலுக்கு 27 வயதில் நல்ல முறையில் திருமணத்தை செய்து முடிக்கலாம்'' என்றவர், ஓய்வு காலத்துக்கான திட்டத்தையும் சொன்னார்.
ஓய்வு காலத்துக்கு..!
''ஓய்வு காலத்தில் மாதம் 12,000 ரூபாய் இருந்தால் போதும் என்கிறார். இன்றைய நிலவரப்படி சுரேஜ்ராஜின் குடும்பச் செலவு 22,500 ரூபாய். இதே போல் 31 ஆண்டுகள் கழித்தும் செலவு செய்ய நினைத்தால் அன்றைய நிலவரப்படி இவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்காக ஓய்வு காலம் வரை மாதம் 1,000 ரூபாயை (எதிர்பார்க்கக் கூடிய வருமானம் 16%) ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 31 ஆண்டுகள் முதலீடு செய்து வர வேண்டும். முடிவில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்தால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுபோக, சுரேஷ்ராஜுக்கு அரசிடமிருந்து மாத பென்ஷன் கிடைக்கும். இதன் மூலம் ஓய்வு காலத்தை சந்தோஷமாக கழிக்கலாம்'' என்றவர், சுரேஷ்ராஜின் ஃபிளாட் வாங்க வேண்டும் என்கிற ஆசைக்கு என்ன செய்யலாம் என்பதையும் சொன்னார்.
''ஐந்து ஆண்டுக்குள் பெங்களூருவில் 25 லட்சம் ரூபாயில் ஃபிளாட் வாங்க வேண்டும் என்கிறார். இப்போது இருக்கும் குடும்ப நிதி நிலைமை இப்படியே தொடர்ந்து நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஃபிளாட் வாங்கும் ஆசையைத் தள்ளிப் போடுவது நல்லது.
புதிதாக டேர்ம் பிளான் எடுத்து இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதின் மூலம் கிடைக்கும் 4,400 ரூபாயுடன், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு வந்து செல்லும்போது செய்யும் தேவையற்ற செலவுகளைக் குறைத்து கொண்டு, பகுதி நேர வேலையின் மூலம் இன்னுமொரு 1,500 ரூபாய் அதிகமாகச் சம்பாதித்தால் எதிர்கால முதலீட்டுக்குத் தேவையான தொகை கிடைத்துவிடும். இதை வைத்து மேலே சொன்னபடி முதலீடு செய்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.'' வாழ்த்துக்கள்!  
- செ.கார்த்திகேயன்