Pages

Sunday, 14 October 2012

My 11th Financial Planning Article in Naanayam Vikatan 14th October 2012

இனி எல்லாம் வளமே! 
ஃப்யூச்சர் பிளான் 
இந்த காலத்து இளைஞர்களுக்கு குடும்பத்தின் மீது அக்கறை இல்லை; ஜாலியாக இருக்க நினைத்து, ஊதாரித்தனமாக செலவு செய்வதில்தான் அவர்கள் கவனமாக இருப்பார்கள் என்று யார் சொன்னது. சேலத்திலிருந்து  27 வயதேயான நவநீதகிருஷ்ணன் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நிதி ஆலோசனை கேட்டு வந்திருந்தார். அப்பா கந்தசாமி மற்றும் அம்மா மனோன்மணி இருவரும் சொந்த ஊரில் வசிக்க, இவர் சென்னையில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரின் மாதச் சம்பளம் 55,000 ரூபாய் (பிடித்தம் போக).
ங்கை பூரணி நாயகி பி.டெக் பட்டதாரி. இன்னும் ஓரிரு மாதங்களில் வேலை கிடைக்கும்பட்சத்தில் அவரது மாதச் சம்பளம் 30,000 ரூபாய் எதிர்பார்க்கலாம். தம்பி சொக்கலிங்கம் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். அவரின் மாதச் சம்பளம் 9,000 ரூபாய், அவரின் தேவைக்கு மட்டுமே சரியாக இருக்கிறது என்பதால், தம்பியின் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆக, இன்றைய நிலையில் குடும்பத்துக்கு கை கொடுப்பது நவநீதனின் மாதச் சம்பளம் மட்டுமே. இதில், அவரின் சென்னை வீட்டு வாடகை, உணவுச் செலவுகள் 10,000 ரூபாய்; வீட்டுக்குத் தருவது 8,000 ரூபாய்; இதுபோக எதிர்காலத் தேவைக்கு மீதமிருக்கும் தொகை 37,000 ரூபாய்.
சொத்து விவரம்!
தந்தையின் பெயரில் உள்ள சொந்த வீடு 20 லட்ச ரூபாய் மற்றும் மனை 1.30 லட்சம் ரூபாய்.
நவநீதகிருஷ்ணனின் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மனை.
தேவைகள்!
ஒரு வருடத்தில் நவநீதகிருஷ்ணன் திருமணம் செய்துகொள்ள ஐந்து லட்சம் ரூபாய் தேவை.
தங்கைக்கு மூன்று வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க 14 லட்சம் ரூபாய் தேவை.
தம்பிக்கு திருமணம் செய்ய இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட தொகை தேவை.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் கார் வாங்க ஐந்து லட்சம் ரூபாய் தேவை.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் சென்னையில் ஃபிளாட் வாங்க 50 லட்சம் ரூபாய் சேர்க்க வேண்டும்.
ஓய்வுக் காலத்தில் இன்றைய நிலவரப்படி 20,000 ரூபாய் மாத வருமானம் தேவை.
நவநீதகிருஷ்ணன் தந்த விவரங்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்கினார் மை அசெட் கன்சாலிடேஷன் நிறுவனத்தின் இயக்குநரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.
இன்ஷூரன்ஸ்!
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து வேலை செய்யும் அலுவலகத்திலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. இது தவிர, 3.60 லட்சம் கவரேஜ் கொண்ட யூலிப் பாலிசி எடுத்து வைத்திருக்கிறார். இதற்கு பிரீமியம் கட்டும் காலம் முடிந்துவிட்டது. நவநீத கிருஷ்ணனின் வருமானத்தை மட்டுமே குடும்பம் நம்பியிருப்பதால், அவர் கண்டிப்பாக ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 15,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.
திருமணம்!
இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்துகொள்ள ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தில் இருந்து விலகும்போது கிடைத்த பி.எஃப். தொகை 1.44 லட்ச ரூபாயுடன், எதிர்கால தேவைக்கு மீதமிருக்கும் தொகையிலிருந்து 6,000 ரூபாயை எடுத்து 1.5 லட்சம் ரூபாயாக ஒருமுறை மொத்தமாக தந்தையின் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய வேண்டும். அப்பாவிற்கு வயது 60 என்பதால் மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி-ல் 10% வருமானம் கிடைக்கும். ஒரு வருடம் முதலீடு செய்தால் 1.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதற்கடுத்த மாதத்திலிருந்து எதிர்காலத் தேவைக்காக 37,000 ரூபாய் இருக்கும். அதிலிருந்து 27,000 ரூபாயை எடுத்து ஆர்.டி-ல் மாதாமாதம் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்து வந்தால், இதற்கு 9% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் 3.40 லட்சம் ரூபாய் கிடைக்கும். எஃப்.டி. வருமானம் 1.65 லட்சம், ஆர்.டி. வருமானம் 3.40 லட்சம் ரூபாய் என மொத்தம் 5.05 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை பயன்படுத்தி திருமணத்தை முடிக்கலாம்.
தங்கையின் திருமணம்!
தங்கையின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளில் 14 லட்ச ரூபாயை எதிர்பார்க்கிறார். எதிர்கால தேவைத் தொகை 37,000 ரூபாயிலிருந்து 27,000 ரூபாய் நவநீதகிருஷ்ணனின் திருமணத் தேவைக்கான முதலீடு போக மீதமிருக்கும் தொகை 10,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் 2.72 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இன்னும் ஓரிரு மாதங்களில் வேலை கிடைத்து அதன் மூலம் 30,000 ரூபாய் வருமானம் எதிர்பார்ப்பதால், அந்த வருமானத்தில் அவரின் தனிப்பட்ட செலவுகள் 10,000 ரூபாய் மற்றும் கல்விக் கடன் 1.2 லட்சம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். அதற்கு இ.எம்.ஐ. 5,000 ரூபாய் (இரண்டு ஆண்டுகளில் கல்விக் கடன் முடிந்து விடும்) போக மீதி இருக்கும் 15,000 ரூபாயை இரண்டு ஆண்டுகளுக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 4.08 லட்சம் ரூபாய். ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் யூலிப் பாலிசி இரண்டு ஆண்டுகளில் முதிர்வடைவதால் அதிலிருந்து
2 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மொத்தம் 8.80 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும். மீதி தேவைப்படும் தொகைக்கு தனிநபர் கடன் எடுத்து தங்கையின் திருமணத்தை முடிக்கலாம். ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் 14% வட்டியில் நான்கு வருடங்களில் மாதம் 13,600 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். தம்பியின் திருமணத்திற்கு அவர் சம்பாதிக்கும் பணத்தில் செய்யலாம் என்பதால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
கார் வாங்க!
இன்னும் இரண்டு வருடத்தில் கார் வாங்க வேண்டும் என்றார். இன்றைய நிலையில் மற்ற தேவைகள் இருப்பதால் கார் வாங்கும் ஆசையை ஐந்து ஆண்டுகள் தள்ளிப்போடுவது நல்லது. இன்றைய நிலையில் 57,000 ரூபாய் சம்பளம் என்கிறபோது, இரண்டு ஆண்டுகள் கழித்து 10% சம்பளம் வருடத்திற்கு உயர்ந்திருந்தால் 65,000 ரூபாய் சம்பளம் வாங்குவார் நவநீத கிருஷ்ணன். நிகழ்கால செலவு 10,000 ரூபாய் என்பது அன்றைய நிலையில் அவரின் கல்யாணத்திற்கு பிறகு குடும்பத்தின் செலவு 25,000 ரூபாயாக இருக்கும். அம்மா அப்பாவின் செலவிற்கு 8,000 ரூபாய் கொடுத்தாலும் கையில் 32,000 ரூபாய் எதிர்கால சேமிப்பிற்கு மீதம் இருக்கும்.
இதிலிருந்து தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ. 14,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். மீதமிருக்கும் 18,000 ரூபாயில் 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் வருமானம் 3.19 லட்ச ரூபாய் மற்றும் 2 லட்ச ரூபாய் வாகனக் கடன் மூலம் கார் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு மாதம் 7,000 ரூபாய் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ. கட்ட வேண்டி இருக்கும். அதே நேரத்தில், மீதம் இருக்கும் 11,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால்
5.02 லட்ச ரூபாய் கிடைக்கும். இந்த தொகையை முன்பணமாகப் பயன்படுத்தி வங்கியில் வீட்டுக் கடன் 45 லட்ச ரூபாய் வாங்கிக்கொள்ளலாம். 18 வருடத்தில் 11% வட்டி விகிதத்தில் கடனை திரும்பக் கட்டினால் மாத தவணை 48,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.
ஓய்வுக் காலம்!
நவநீதனின் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 18 ஆண்டுகள் இருக்கிறது. அன்றைய நிலையில் இவரின் மாதச் செலவுக்கு மாதம் 95,000 ரூபாய் தேவை. அதற்கு 1.10 கோடி ரூபாய் இவர் கையில் இருக்க வேண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து 10% சம்பள உயர்வின்படி 90,000 ரூபாய் சம்பளம் பெறுவார். இதிலிருந்து குடும்பச் செலவுகள் போக, மாதம் இ.எம்.ஐ. போக மீதி இருக்கும் தொகையில் 10,000 ரூபாயை எடுத்து 18 ஆண்டுகள் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது 1.10 கோடி ரூபாய் கையில் கிடைக்கும். இதுபோக ஓய்வுபெறும்போது பி.எஃப். மற்றும் பணிக் கொடையாக 70 லட்ச ரூபாய் கிடைக்கும்.
நவநீத கிருஷ்ணனின் வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள்!

Sunday, 26 August 2012

Retirement Planning - Innovative Solution in Naanayam Vikatan 26th August 2012

ஓய்வுக்காலத் திட்டம்: இனி தேவை இல்லை பயம்!
ம்ம வீட்ல ஒரு மா மரத்த வெச்சு தினமும் தண்ணி ஊத்துறோம்... எதுக்காக? பின்னாளில் அது காய்ச்சு நமக்கு பழம் கொடுக்கும்ங்குற நம்பிக்கையிலதானே..? - கடைசி காலத்தில் பிள்ளைகளின் கவனிப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்த சினிமா வசனம் இது!

''ஆனால், ஓய்வுக்காலத்துக்காக முறையாகத் திட்டமிடாமல் இருந்துவிட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றிய பெற்றோர்கள், தமது ஓய்வுக் காலத்திற்கென்று திட்டமிடாமல் இருந்தது அவர்களின் தவறே! தவிர, இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலவரம் நாம் ஓய்வுபெறும்போது இருக்குமா என்றால் இருக்காது. நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துதான் வருகிறது. எனவே, இன்று முதல் ஓய்வுக்காலத்திற்குத் திட்டமிடுவது அவசியம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.  

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைப்பது போல, தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களும் தமது ஓய்வுக்காலத்தில் தாமாகச் சேமித்து வைத்த தொகையிலிருந்து எப்படி பென்ஷன் பெறலாம்? அது போக அதிலிருந்து ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் மொத்த வருமானம் எவ்வளவு இருக்கும்? என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் அவர்.

''இந்திய அரசு சார்ந்த வேலைகளை செய்கிறவர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் 10% தொகை பிடித்தம் செய்து சேமிக்கப்பட்டு அதிலிருந்து பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த பென்ஷன் திட்டத்தில் இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, சேமித்த மொத்தப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு, மீதி இருக்கும் பணத்திலிருந்து மாதாமாதம் பென்ஷன் பெறலாம். அல்லது மொத்தப் பணத்திலிருந்தும் பென்ஷன் வாங்கலாம்.

பென்ஷன்தாரர் இறந்த பின்னர் அவருக்கு கிடைத்த மாத பென்ஷனிலிருந்து, மனைவியின் வாழ்க்கைக் காலம் வரை மாதாமாதம் 50% தொகை கிடைக்கும். அவருக்குப் பிறகு அவர்களின் பிள்ளைகளுக்கு பென்ஷன் தொகை எதுவும் கிடைக்காது. மறைமுகமாகச் சேமிக்கப்படும் இந்த தொகை அவர்களின் ஓய்வுக்காலத்தில் நிச்சயம் பேருதவியாக இருக்கிறது.

ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த வசதி இல்லை. இவர்கள் ஓய்வுக்கால நிதித் திட்டமிடலைச் செய்யாமல் விடும்போது, பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் கைவிடப்படும்போது பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். எதிர்காலத்தில் வரப்போகிற இந்த சிக்கலைத் தவிர்க்க இப்போதே ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் திட்டமிடுவது அவசியம்.

இதற்கு ஒரேவழி, அரசு பணியாளர்களைப் போலவே தனியார் நிறுவன ஊழியர்களும் தங்களது மாதச் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதத் தொகையை ஓய்வுக்காலத்திற்காக ஒதுக்குவதே! இந்த முதலீட்டை ஓய்வுக்காலம் வரை தொடரவேண்டும். இதன்மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உதாரணத்திற்கு ஒருவருக்கு இதுபோன்று வந்த முதலீட்டுத் தொகை 12 லட்சம்  ரூபாயை கீழே தரப்பட்டிருக்கும் திட்டத்தின் அடிப்படையில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.

கடந்த 17 ஆண்டுகளில் ஏற்ற இறக்கத்திலும் லாபம் ஈட்டி தந்திருக்கும் இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளை எடுத்துக்கொள்வோம். ஒன்று, ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்ட், மற்றொன்று பிர்லா சன் லைஃப் 95. இந்த இரண்டு ஃபண்டுகளும் கடந்த பதினேழு ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், இறுதியில் இன்று நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேலே சொன்ன ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்டுகளில் 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், வருடத்திற்கு 10 சதவிகிதம் என்ற கணக்கில் மாதா மாதம் சிஸ்டமெட்டிக் வித்டிராயல் பிளான் (ஷிகீறி) முறையில் 10,000 ரூபாய் அதிலிருந்து பென்ஷன் தொகையாக (அனுமானம்) எடுத்தது போக, பத்தாண்டு இறுதியில் 79.72 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் கிடைத்திருக்கும்.
அதேபோல் பிர்லா சன் லைஃப் 95 ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், பென்ஷன் தொகையாக எடுத்ததுபோக 51.96 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். 

அதேபோல் 1995-2005, 1996-2006 என்கிற பத்தாண்டு அடிப்படையில் முதலீடு செய்திருந்தால் மாதா மாதம் 10,000 ரூபாய்  எடுத்தது போக, குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாயும், அதிகபட்சம் ஒரு கோடி ரூபாயும் வருமானமாக கிடைத்திருக்கும். இந்த தொகை முதலீட்டாளருக்குப் பயன்படுவது மட்டுமல்லாமல் அவரின் மனைவி மற்றும் வாரிசுகளுக்கும் பயன்படும்.
பொதுவாக அனைவருக்குமான சமீபத்திய முதலீடு தங்கமும், ரியல் எஸ்டேட்டுமாகத்தான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் என்பதால் அந்த இரண்டில் மட்டுமே காசை கொட்டி முதலீடு செய்கிறார்கள் மக்கள். பங்குச் சந்தையில் எப்படி ஏற்ற இறக்கம் சகஜமோ, அதேபோலத்தான் இதுபோன்ற முதலீடுகளிலும் ஏற்ற இறக்கம் உண்டு. அதற்காக அதில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. அதில் மட்டுமே முதலீடு செய்வது தவறு!

ஓய்வுக்காலத்தில் பெரும்பாலானவர்கள் ரிஸ்க் குறைவு என்பதால், அஞ்சலக ஆர்.டி, பேங்க் எஃப்.டி. போன்ற முதலீட்டு இடங்களையே தேர்வு செய்கிறார்கள். அதை மட்டுமே தேர்வு செய்யாமல் மேலே சொன்னதுபோல பேலன்ஸ்டு ஃபண்டுகளையும் தேர்வு செய்து நமது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்.
ஓய்வுக்காலத் தொகையிலிருந்து  (பி.எஃப்., பணிக் கொடை) 50% தொகையை இதுபோன்று பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, மீதி தொகையை அஞ்சலக ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரிஸ்க் குறைவானவற்றில் முதலீடு செய்யலாம்.

இன்னொரு விஷயம், நீண்ட கால முதலீடு (10-15 ஆண்டுகள்) என்கிறபோது ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம். என்னதான் பங்குச் சந்தை ஏறி இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கிற லாபம் ஆர்.டி., எஃப்.டி. அளிக்கும் லாபத்தைவிட அதிகமாகவே இருக்கும்!

குறிப்பு: கடந்த 10, 15 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிலவரங்களின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டிருக்கும் வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் சந்தை நிலவரப்படி இந்த வருமானம் மாற்றத்துக்குட்பட்டது.

Sunday, 12 August 2012

My Article on Credit Card in Naanayam Vikatan 12th August 2012

கிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம்!
''இன்றைக்கு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலருக்கு அதன் கட்டண முறை பற்றி சரியாகத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள கவனம் செலுத்துவதுமில்லை. இதனாலேயே பலவகையான மறைமுக கட்டணத்தைச் செலுத்தி, பின்பு புலம்புகிறார்கள். இந்த கட்டண விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால், கண்டிப்பாக காசை மிச்சப்படுத்தலாம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பத்மநாபன். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வசூலிக்கும் பல வகையான கட்டணங்கள் பற்றி அவரே விளக்கிச் சொன்னார்.
   கட்டணங்களின் வகை!
சேர்க்கைக் (அறிமுகக்) கட்டணம், ஆண்டுக் கட்டணம், பணம் எடுத்தலுக்கான கட்டணம், வட்டி, நிதிக் கட்டணம், காலதாமதக் கட்டணம், சேவைக் கட்டணம் என பல கட்டணங்கள் உண்டு. இனி ஒவ்வொரு கட்டணத்தையும் பார்ப்போம்.
அறிமுகம் மற்றும் ஆண்டுக் கட்டணம்!
பெரும்பாலான வங்கிகள் இந்த இரண்டு கட்டணங்களும் இல்லாமல் கிரெடிட் கார்டுகளை தருகின்றன. ஆனால், சில கார்டுகளில் நாம் குறிப்பிட்ட அளவு செலவு செய்யாவிட்டால் அதற்கு அடுத்த ஆண்டில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணத்தைத் தவிர்க்க கிரெடிட் கார்டு வாங்கியவுடன் கட்டணம் குறித்த விவரங்களை உறுதிபடுத்திக்கொள்வது நல்லது.
சில கார்டுகளுக்கு முதலில் நாம் 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். அதற்கு தேவையான அளவு கூப்பன்கள் தருவார்கள். இது மாதிரியான விஷயங்கள் அதிக வருமானம் பெறுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்பதால் கூப்பன் தருகிறார்கள் என்பதற்காக எல்லோரும் இதில் ஈடுபாடு காட்டுவது நல்லதல்ல.

நகல் ஆவணக் கட்டணம்!
பெரும்பாலான கிரெடிட் கார்டுகளின் ஸ்டேட்மென்ட்கள் தபால் மற்றும் மின்னஞ்சலில் வரும். இதை பத்திரப்படுத்தாமல் தொலைத்துவிட்டால் தேவை என்கிறபோது வங்கியில் நகல் ஆவணம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இதை பெற 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

வட்டி மற்றும் சேவைக் கட்டணம்!
ஸ்டேட்மென்ட் வந்த இருபது நாட்களில் நாம் பணத்தைக் கட்ட வேண்டும். தவறினால் அதற்கு 2.5% முதல் 3.5% வரை மாதந்தோறும் தினசரி கூட்டு வட்டி முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக. ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருள் வாங்கியிருந்தால் அவருக்கு வருடத்திற்கு 35% முதல் 52% வரை வட்டி கட்ட வேண்டி இருக்கும். வட்டிகளிலேயே மிகவும் அதிகமான வட்டி என்றால் அது கிரெடிட் கார்டு வட்டிதான்.
தாமதக் கட்டணம்!
நாம் குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தாவிட்டால் தாமதக் கட்டணமாக 300-600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்களும் உங்களது நண்பரும் உணவு விடுதியில் 200 ரூபாய் செலவழித்திருக்கிறீர்கள் என்றால் அதற்குகூட கட்டணமாக 300 ரூபாய் தாமதக் கட்டணமாகக் கட்ட வேண்டி இருக்கும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் முடிந்த மட்டில் தாமதமாகப் பணம் செலுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பணம் எடுக்க கட்டணம்!
எக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கக் கூடாது. அதற்கு 2.55% வட்டி வசூலிக்கப்படுகிறது அல்லது 250 ரூபாய் மினிமம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நமக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தாண்டி செலவு செய்ய சில கிரெடிட் கார்டுகள் உதவுகின்றன. ஆனால், இதற்கு 300 முதல் 600 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
மறைமுகக் கட்டணம்!
ஒரு லட்சம் மதிப்பிலான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களால் முழுமையாகப் பணம் செலுத்த முடியவில்லை என்றால் 80% உபயோகத்தை மற்ற கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கூடுதல் கால அவகாசம் கிடைப்பதுடன், சில கார்டுகளில் குறைந்த வட்டியுடன் அந்த பணத்தை தவணை முறையிலும் செலுத்தலாம். இதற்கு மறைமுக கட்டணங்கள் இருக்கும். அதை உறுதிப்படுத்திய பிறகு மாற்றுவது அவசியம்.
கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தினால் அது எமன் அல்ல,  நண்பன்தான் என்பதை உணர்வீர்கள்!

Monday, 6 August 2012

Where To Park Your Retirement Funds???

It is yet another view of how to choose an investment vehicle for our retirement funds to beat inflation. I am not here to change any one and I don't believe that I can change anybody, at the same time I would be very happy if you look at this mail and supporting data as one more perspective probably you appreciate the efforts I have put in.
Thanks a lot for your continuous reading....

In India people who work for Government Service, saves 10% of their basic salary for their pension fund. Which keeps accumulating over the entire service, is almost 30 plus years?
At the time of retirement, 1/3 of the pension fund can be taken as a commutation and the rest can be given as a pension as long as the individual survives and after that spouse will get 50% of the pension till her life time.
Today, many of us are working for non-govt. service so we do not have the privilege to enjoy any pension from our employer. But, if one contributes the same thing what the govt. employee does it (without their knowledge/unconsciously) then we can also create a much bigger corpus, provided one is disciplined. These are the accumulation phase.
When it comes to distribution phase, everybody has a got a worry and where it can be put it safe and withdraw on a monthly basis, so people choose different vehicle without understanding its risk vs reward or return.
Whenever advisor or planner advice for their clients, as far as retirement planning is concerned they asked to put it in a much safer place, because the investor/client do not have the time to create more wealth. Yes, it is very true. But, at the same time if the individual is committed, as if it is like a government pension, and don't have the right to withdraw that money, then they can take a little risk because of longer tenure.
Whenever we don't have the option or choice to exercise we are not questioning anything, but given a choice we want to question everything.
I always believe in numbers and it excites me whenever am fiddling with the data.
Today, I have taken two balanced funds which exist for more than 17 years (HDFC Prudence and Birla Sun Life 95 Fund) and I have taken 10 consecutive years, if one invested their retirement kitty and keep withdrawing 10% per annum as interest and withdraw monthly. It not only gives monthly pension but also give appreciation in the pension kitty, I have attached the data for your reference.
If the same thing can be extended for 15 years then the appreciation is mind boggling. All the 15 plus years markets are volatile and it has seen all the ups and downs.
When people are betting on PROPERTY and GOLD which is basically speculative investment in nature and don't have the proper track record which is not regulated by any regulator. Why don't one look at the investment which has a strong track record and highly regulated  by the regulator, for our better future.
I am just sharing with you one more perspective to look at the investment and what are risk and the reward over a period of time.
When we go to different places, we deploy different vehicle to reach the destination like walking, cycle, two wheeler, car, bus, train and flight. But, when it comes to investment most of them are using only Bank Deposit, Post Office and Insurance which is a two wheeler and to cover a long distance these vehicle will be a disaster.
Investment is very simple, provided if you are disciplined and understand how each instrument behaves then money will never ever be your problem at any point of time.

We have 365 days' time to work for money and hardly found time to manage whatever we have earned. It is not lack of time, it is lack of interest, but if each individual spends a day at least in a year, they have much control over their finances than ever before.

It is after all our hard earned money, if we do not take care then who else will.

Sunday, 29 July 2012

My Tenth Financial Planning Article in Naanayam Vikatan on 29th July 2012

இனி எல்லாம் வளமே!
''நாணயம் விகடனில் நீங்கள் தரும் நிதி ஆலோசனை பகுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகத் தெளிவாக, புரியும் விதத்தில் விளக்கமாகத் தருகிறீர்கள். இதர வாசகர்களின் குடும்ப நிதி ஆலோசனைகளில் இருந்தும்கூட புதுப்புது நிதித் திட்டமிடல் விஷயங்களை எங்களால் கற்றுக்கொள்ள முடிகிறது. அந்த வகையில் எங்கள் குடும்பத்திற்கும் நிதி ஆலோசனை கிடைத்தால் நன்றாக இருக்கும்'' என்று தஞ்சாவூரில் இருந்து போன் செய்திருந்தார் வாசகர் என்.கார்த்திகேயன்.
இவருக்கு இப்போது 52 வயது. இத்தனை காலம் திட்டமிடல் இல்லாமல் இருந்தாலும், இனியாவது திட்டமிட்டு வாழ வேண்டும் என்கிற உற்சாகத்தோடு வந்திருந்தார் கார்த்திகேயன்.
''நான், என் மனைவி சாந்தி, மகன் சித்தார்த் (11-ம் வகுப்பு படிக்கிறான்) என மூன்று பேர் அடங்கிய அளவான குடும்பம். நான் அரசு நிறுவனத்தில் துணை தலைமை பொறியாளராக (பொறுப்பு) வேலை பார்க்கிறேன். என் மாதச் சம்பளம் பிடித்தம் போக 40,000 ரூபாய். வீட்டுச் செலவுகள், கல்விச் செலவுகள், தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ., இன்ஷூரன்ஸ் பிரீமியம், மெடிக்ளைம், அலுவலக பி.பி.எஃப். சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஆர்.டி. என மாதம் 38,000 ரூபாய் செலவாகிறது. எதிர்காலத் தேவைக்கு சேமிக்க கையில் இருக்கும் தொகை 2,000 ரூபாய்.
எதிர்காலத் தேவைகள் என்னவென்றால், எனது ஓய்வுக்காலத்திற்குத் தேவையான தொகை சேமிப்பு. வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓய்வுக்கால வாழ்க்கையை மனைவி, மகனுடன் சொந்த ஊரான மயிலாடுதுறையில் நிம்மதியாக கழிக்க வேண்டும் என்பது என் ஆசை. அங்கு தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு குறைவுதான் என்பதால் மாதம் 25,000 ரூபாய் இருந்தால் போதுமானது.
இது தவிர, மகனின் கல்விச் செலவுக்கான பணத்தையும் சேமிக்க வேண்டும். அவனை நன்கு படிக்க வைத்து, ஒரு நல்ல நிலைமைக்கு உயர்த்திவிட்டாலே போதும் அவனது எதிர்காலத்தை அவனே தீர்மானித்துக் கொள்வான்'' என்றவர், தனது குடும்பத்தின்      வரவு - செலவு விவரங்கள், சொத்து விவரங்கள் குறித்தும் விளக்கமாகச் சொன்னார்.
''தஞ்சாவூரில் இருபது லட்சம் மதிப்பிலான வீட்டுமனை, தஞ்சை வல்லம் பகுதியில் இரண்டு லட்சம் மதிப்பிலான வீட்டுமனை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள பூர்வீகச் சொத்தில் எனது பங்கு 10 லட்சம் ரூபாய் என மொத்தம் 32 லட்ச ரூபாய் சொத்து தற்போது இருக்கிறது. இதிலிருந்து சிறிதளவு வருமானமும் இருக்கிறது. இத்தனை இருந்தும் எங்களுக்கு நிதி தொடர்பான வழிகாட்டல்தான் இல்லை. நீங்கள்தான் எங்களுக்கு நல்ல வழியைக்காட்ட வேண்டும்'' என்றவருக்கு, நிதி ஆலோசனை வழங்கினார் மை அசெட்ஸ்  கன்சாலிடேஷன் இயக்குநர் பி.பத்மநாபன்.
''பெட்டர் லேட் தென் நெவர் என ஆங்கிலத்தில் பழமொழி உண்டு.           52 வயதானாலும் இன்னும்கூட வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்று முயற்சிக்கும் இவருக்கு முதலில் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும். அவர் கொடுத்திருக்கும் வரவு-செலவு பட்டியலைப் பார்க்கும்போது வீட்டு நிர்வாகத்தைப் பொருளாதார அடிப்படையில் சரியாக நடத்தி வருகிறார். வரவுக்கு ஏற்ற செலவு என்கிற மாதிரியாகத்தான் இருக்கிறது இவரின் வீட்டு நிர்வாகம். சம்பாதிக்கும் தொகை முழுவதையும் செலவு செய்து விடாமல் எதிர்காலத் தேவை கருதி மியூச்சுவல் ஃபண்ட், ஆர்.டி.யிலும் முதலீடு செய்து வருகிறார். முதலில் இவர் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இன்ஷூரன்ஸ்.

இன்ஷூரன்ஸ்!
ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் ஒன்பது லைஃப் இன்ஷூரன்ஸ் (கவரேஜ் 9 லட்சம் ரூபாய்) பாலிசிகளுக்காக மாதம் 4,300 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். இதில் ஆறு பாலிசிகள் இன்னும் கொஞ்ச காலத்தில் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. அதை அப்படியே தொடரலாம். மீதி இருக்கும் இரண்டு யூலிப் பாலிசிகளை உடனடியாக சரண்டர் செய்துவிடலாம். ஐந்து லட்சம் கவரேஜ் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை முடியும்போது தொடராமல் அப்படியே விட்டுவிடலாம்.
இதற்குப் பதிலாக,         25 லட்சம் ரூபாய்க்கு தனியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம். இதற்கு வருடம் 12,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். அது போக குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாய்க்கு மெடிக்ளைம் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 14,150 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.

மகனின் கல்விக்கு!
மகனை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தகுதி அடிப்படையில் தேர்ச்சி பெற்றுவிட்டால் 12 லட்சம் ரூபாயும், இல்லாவிட்டால் 20 லட்சம் ரூபாயும் தேவைப்படும் என்றார். கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது என்பதால், இவர் எதிர்பார்க்கும் தொகையை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்திற்குள் ஈட்ட முடியாது. கல்விக் கடன் பெறுவதன் மூலமாகவோ அல்லது சொத்து இருப்பதால் அதை பயன்படுத்தியோ மகனை மருத்துவம் படிக்க வைக்கலாம்.
ஓய்வுக்காலத்திற்கு..!
ஓய்வுக்காலத்திற்கு இன்னும் ஏழு ஆண்டுகள்தான் பாக்கி இருக்கிறது. அதற்கு மாதம் 25,000 ரூபாய் வருமானம் வருவதற்கு முதலீட்டை இன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
ஓய்வுபெறும்போது அலுவலகத்தில் இருந்து பணிக்கொடை 10 லட்சம், பி.எஃப். 15 லட்சம் என மொத்தம் 25 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைத்தாலே மாதம் 25,000 ரூபாயை ஈட்டி விடலாம். அதுபோக, இவர் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து மாதம் 3,000 ரூபாய் பென்ஷன் தொகை கிடைக்கும்.  ஏற்கெனவே பென்ஷன் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார். இதிலிருந்து ஓய்வுக்காலத்தில் மாதம் 1,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிர, தற்போது வாங்கி இருக்கும் தனிநபர் கடன் 1.1.2014-ல் முடிவடைவதால் அன்றிலிருந்து 31.12.2019 வரை 60 மாதங்கள் அதற்காக கட்டி வந்த இ.எம்.ஐ. 8,800 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் முதலீடு முடிவின்போது 7.25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
ஏற்கெனவே செய்துவரும் ஆர்.டி. முதலீடு 3,000 ரூபாய் 10% வருமானத்துடன் இன்னும் 88 மாதங்கள் (1.8.12 முதல் 31.12.2019 வரை) தடையில்லாமல் தொடர்ந்தால் முதிர்வின்போது 3.90 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஏற்கெனவே செய்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் (அதன் தற்போதைய மதிப்பு 62,000 ரூபாய்) செலவு, சேமிப்பு போக மீதமிருக்கும் 2,000 ரூபாயையும் சேர்த்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் தொடர்ந்து 88 மாதங்கள் (1.8.2012 முதல் 31.12.2019 வரை) முதலீடு செய்து வந்தால் முதலீடு முதிர்வின்போது 5.06 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஆக மொத்தம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருந்து 16.22 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் இவர் எதிர்பார்த்த 25,000 ரூபாயைவிட அதிகமாக வருமானம் கிடைக்கும். இதை பயன்படுத்தி ஓய்வுக்காலத்தை சொந்த ஊரில் நிம்மதியாக கழிக்கலாம்!
- செ.கார்த்திகேயன்

Friday, 20 July 2012

Inflation - How Dangerous It is?

Most of the Investors in India never understand what risk is and what is not? Everyone feel that fixed instruments are safe and not risky and keep saving money without understanding the big risk involved?

Fixed instruments are good for a short term parking of your money, not for long term!

This particular excel file will help you to understand, how the inflation will eat all your savings over a period of time, if you are happy with fixed returns!!!

1. At present, life expectancy in India is around 73 years and it will keep increasing due to medical advancement. People who are 45 years now can have the better chance to outlive 80 plus years.

2. We are living in a fast paced life, and everybody wants to retire at the age of 50 years or much before that and what they fail to understand is, all of us are going to live for another 30 years post retirement, either with little income or no income!

3. At present, most of the banks are offering 10% interest rate and effective yield is only 6.91%( highest tax bracket), whereas current inflation is 8%. Then the corpus will be eroded in less than 15 years and who will take care the next 15 years without income!!!

4. Risky investments like equity or equity mutual funds gave superior return over a period of 10 years plus. At present, there is no long term capital gain on your equity related returns.

5. What you believe SAFE is NOT SAFE, in reality. I think this excel file will help you to understand the shocking reality about inflation and how dangerous it is!, which eventually can destroy one’s saving just like that!

6. All over the world, over a long period of time equity is the one and only asset class which have the potential to beat the inflation convincingly.

7. Today, most of us fall under highest tax bracket and the number of people in that category keeps on increasing year after year.

8. I request you all to understand the risk vs return of the investment before you make any investment. Don’t carry away by the flashy ads or join the speculation waves created by Property and Gold!

9. Last, but not the least, Traditional Insurance policy will fetch 5 to 6% post tax return which is far lesser than inflation and most of us believe that investing in insurance is safe and good!

10. We all work hard to create wealth for our golden years. Everyone should make sure at least one should continuously enjoy what they have earned in their lifetime. Otherwise, it will not make any sense for the one who has put so much effort in their career to build this!!!

p.s. Hope this excel file helps you to understand inflation in a much better way!


Sunday, 17 June 2012

My Ninth Financial Planning Article in Naanayam Vikatan on 17th June 2012

நேற்று... இன்று... நாளை!
 
குடும்ப நிதி ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தன் தென் ஆப்பிரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர். மேலாளராகப் பணியாற்றி வருகிறார். ''எனக்கு 42 வயதாகிவிட்டது. இனிமேலாவது என் வாழ்க்கையைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்'' என்றார் விவேகானந்தன்.
விவேகானந்தனின் மாதச் சம்பளம் பிடித்தம் எல்லாம்போக, இரண்டு லட்சம் ரூபாய். மனைவி, வசந்தா தனியார் கல்லூரியில் 16 ஆண்டுகள் விரிவுரை யாளராக (ஹெச்.ஓ.டி.) பணியாற்றி யவர், தற்போது இல்லத்தரசியாக இருக்கிறார்.  வேலையில் இருந்தபோது இவருடைய மாதச் சம்பளம் 50,000 ரூபாய். இத்தம்பதியர்களுக்கு பத்து வயதான ஆண் மகன் மிதேஸ். நான்காம் வகுப்பு படிக்கிறான்.  
''சவுத் ஆப்பிரிக்காவில் வசித்து வருவதால் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக மாதம் 20,000 ரூபாய் செலவாகிறது. கோவில்பட்டியில் வசித்துவரும் மனைவி மற்றும் மகனின் உணவு மற்றும் கல்வித் தேவைகளுக்காக மாதம் 24,200 ரூபாய் செலவாகிறது. வீடு கட்ட வங்கி யில் வாங்கியிருக்கும் 26.5 லட்சம் கடனுக்காக மாதம் 32,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டி வருகிறேன். இன்னும் 14 ஆண்டுகள் கட்ட வேண்டும். ஏற்கெனவே எடுத்த ஒன்பது இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்காக மாதம் 5,000 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறேன். காருக்கான பெட்ரோல் மற்றும் பராமரிப்புக்காக மாதம் 2,500 ரூபாய் செலவாகிறது.
இது தவிர, ஒரு லட்சம் ரூபாய் சீட்டு இரண்டில் மாதம் 8,000 ரூபாய் சேமித்து வருகிறேன். இன்னும் பத்து மாதங்களில் இந்த சீட்டு முடிந்துவிடும். எனது பெற்றோருக்கு மாதம் 5,000 ரூபாய் கொடுத்து வருகிறேன். ஆக, மொத்தம் மாதம் 96,700 ரூபாய் செலவாகிறது. எதிர்கால முதலீட்டிற்கு மீதமிருக்கும் தொகை 1,03,300 ரூபாய்'' என்று வரவு செலவுக் கணக்கை தந்த விவேகானந்தனுக்கு சில சொத்துகளும் உண்டு.  
''இன்னும் ஓராண்டில் என் மகனது எதிர்காலத் தேவைக்காக சென்னையிலும், குடும்பத் தேவைக்காக கோயம்புத்தூரிலும் வீடு வாங்க வேண்டும். மகனின் கல்விக் கென்று 20 லட்சம் ரூபாய் சேமிக்க வேண்டும். 25 வயதில் நடக்க இருக்கும் அவனது திருமணத்துக்கென்று பத்து லட்சம் ரூபாயைச் சேமிக்க வேண்டும். எனது ஓய்வுக் காலத்தில் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்காக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்'' என்றவருக்கு நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.

இன்ஷூரன்ஸ்!
''ஏற்கெனவே ஒன்பது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார் விவேகானந்தன். இதில் சமீப காலத்தில் எடுத்திருக்கும் ஐந்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்துவிடலாம். குறைவான கவரேஜுக்கு அதிக பிரீமியம் செல்வதால்தான் இந்த பாலிசிகளை சரண்டர் செய்யச் சொல்கிறேன்.
மீதமிருக்கும் நான்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகளோடு, இரண்டு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு வருட பிரீமியம் 63,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்.
அதேபோல், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு வருடம் 11,700 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். இந்த இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் சேர்த்து மாதம் 6,300 ரூபாய் எடுத்து வைத்தால் போதுமானது.
மகனின் கல்விக்கு..!
மகனை பி.இ. அல்லது எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க 20 லட்சம் ரூபாயைச் சேர்த்து வைக்க வேண்டும் என்கிறார்.  இத்தொகையைச் சேமிக்க மாதம் 11,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் எட்டு ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கக் கூடிய 20.45 லட்சம் ரூபாயை பயன்படுத்தி மகனுக்கு தரமான கல்வியைக் கொடுக்கலாம்.
மகனின் திருமணத்துக்கு!
மகனுக்கு 25 வயதில் திருமணம் செய்து வைக்க 10 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறார். அந்தத் தொகையை சேமிக்க மாதம் 1,500 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 17 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கக்கூடிய 14.10 லட்சம் ரூபாயை பயன்படுத்தி மகனின் திருமணத்தைச் சிறப்பாக முடிக்கலாம்.

வீடு வாங்க..!
இன்னும் ஆறு மாதத்துக்குள் சென்னையிலும், ஒரு வருடத் துக்குள் கோயம்புத்தூரிலும் வீடு வாங்க வேண்டும் என்கிறார்.
வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவதன் மூலம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்கு ஆரம்பத் தொகை நிச்சயம் தேவைப்படும். தென் ஆப்பிரிக்காவில் செய்யும் வேலை தவிர, இதர வகையில் வருமானம் கிடைத்தாலோ அல்லது மனைவி வேலைக்குச் சென்று வருமானம் வர ஆரம்பித்தாலோ ஆறு மாதத்திற் குள் வீட்டுக் கடன் வாங்கத் தேவையான முன் பணத்தை புரட்டி விட முடியும்.
அந்த முன்பணத்தை வைத்து,  சம்பள அடிப்படையில் சென்னையில் வீடு வாங்க 25 லட்சம் ரூபாயும் (மாத இ.எம்.ஐ. 28,000 ரூபாய் கட்ட வேண்டும் - வட்டி விகிதம் 10.75%), கோவையில் வீடு வாங்க 23 லட்சம் ரூபாயும் (மாத இ.எம்.ஐ. 25,800 ரூபாய் - வட்டி விகிதம் 10.75%) வங்கியில் கடனாகப் பெற முடியும். இந்த இரண்டு கடன்களும் கடன் வாங்கிய நாளிலிருந்து 180 மாதங்களுக்குள் அடைப்பதாக இருக்கும்.

ஓய்வுக் காலத்துக்கு..!
இவரது ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 13 ஆண்டுகள் இருக் கிறது. அதற்குள் இவர் 2.09 கோடி ரூபாயைச் சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான் இந்த தொகையிலிருந்து மாதம் இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். இன்றிலிருந்து மாதம் 35,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால்,  1.68 கோடி ரூபாய் கிடைக்கும்.
தவிர, மகனின் கல்வித் தேவை முடிந்ததும் அதற்காக சேமித்துவந்த தொகை 11,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்தால், 9 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
பத்து மாதங்களில் சீட்டு முடிந்துவிடும் என்பதால் அதற்காகச் சேமித்து வந்த தொகையை ஓய்வுக் காலத்திற்காக 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் 12 ஆண்டுகள் முதலீடு செய் தால், 32 லட்சம் ரூபாய் கிடைக் கும். ஆக, ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் தொகை 2.09 கோடி ரூபாய் கிடைத்துவிடும்.
இந்த தொகையை 10% வருமானம் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைப்பதன் மூலம் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்த பணத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம்.