Pages

Monday, 21 January 2013

Power of Equity Mutual Fund Returns Will be Realized in Long Term only, say 10 plus years!!!


One Lakh rupees invested in HDFC Equity Fund on 25th April 2001, in a dividend reinvestment option and the first dividend declared was Rs. 11,194.03 on 16th March 2002 and the fund was switched to Growth mode on 1st April 2002. By the time Rs. 1 lakh has grown to Rs. 1,26,574 almost 27% in one year time. (See the PDF attached, for better understanding).

This particular statement was generated on 10th October 2012 and that day prevailing NAV was 276.832 and value reads Rs. 15,51,124.85.

As on Friday (18/01/2013) HDFC Equity Growth NAV is 303.213. If you multiply this NAV to the existing units of 5603.127, you will get Rs. 16,98,940.94 (Sixteen Lakhs ninety eight thousand and nine forty rupees and ninety four paisa only).

This fund has generated 27.26 CAGR for the past 141 months.

The SENSEX was closed on 3600 on 25th April 2001, even though this fund was not benchmark with SENSEX, most of the investor will know only Sensex value and they always quote I invested when SENSEX was at this level and now it is more than that level so I want to redeem.

In other words Sensex value 3600 (24/01/2001) grows to 20040 level (18/01/2013) on Friday which means it has grown 5.56 times (CAGR 15.73) as against the fund grows from 1 lakh to 17 Lakhs (approx.) which is 17 times (CAGR 27.26)!

My Observation based on the above Investment as follows...

1. All along I was showing only the fund returns, not the investor returns because investor hardly stays in equity market to enjoy the fruit.

2. This is one of my client (recently acquired) portfolio and still it is active and I have changed the client name to my name and all the sensitive data’s are changed to avoid any compliance issue. People have more conviction when they actually saw the statement of account that is the reason I have attached the same.

3. This is not the only fund generated such a huge returns, nearly dozen funds has given the same return or more return than this. But, I have statement for this fund only.

4. The beauty of the investment is no need to pay any tax and the investor can enjoy all the money, which reminds me the sayings patience pays...

5. This is the not the mail to promote this fund or this kind of return one can expect in the near future also, and being a financial planner my duty is to explain how powerful diversified equity funds are when you have invested long, especially for our long term goals like children education, marriage and retirement etc.

6. Don't always look at only SENSEX value, because the amount you invested most of the time will not replicate bench mark of SENSEX. Moreover, the fund manager has got the ability to create more alpha (more returns than benchmark they have chosen).

7. Sensex closing price on 18/01/2008 was 19013 and exactly 5 years later the Sensex closing price on 18/01/2013 was 20040 which mean CAGR of 1.05% in the last 5 years.

8. HDFC Equity Fund Growth option NAV was 207.76 and today it is 303.213 which are CAGR of 7.85% as against SENSEX CAGR of 1.05%. In the SIP mode for the last 5 years (60 months) the amount invested is 2000*60=1,20,000 and the value today is Rs. 1,81,310 which is CAGR of 15.33%.

9. Mutual Fund investments are well regulated and unfortunately the investors are not willing to take part the way they took part in real estate and GOLD.

10. Based on the above facts and figures I strongly believe that 15% CAGR for the next 5 years is almost you can take it for granted. Hope people have witness the trailer in 2012 for equity returns.

The entire analysis is to show how big this particular investment vehicle is and it is meant for masses (poor to rich). I reiterate once again that mutual fund is the only route in which everybody can create a huge wealth over a long period.

Sunday, 30 December 2012

When and Where To Invest for Different Goals!!! in Naanayam Vikatan on 30th December 2012


எதில், எப்படி முதலீடு செய்வது?
 
சென்ற இதழில் 'குடும்பச் செலவை சமாளிக்க சூப்பர் ஃபார்முலா’ அட்டைபடக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்த வாசகர்கள், 'அருமை, அருமை! ஆனால், மிச்சப்படுத்தும் பணத்தை எப்படி சேமிப்பது?, நீண்டகாலத்துக்கான பணத்தை எப்படி முதலீடு செய்வது? அதற்கான வழிமுறைகளையும் சொல்லுங்கள்!’ என்று கேட்க, அதுபற்றி விளக்கமாக இந்த வாரம் சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.  
''கடந்த இதழில் நான் தந்த ஃபார்முலாவில், கல்விக்கான செலவு (6%), டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்ளைம் (6%), சுற்றுலா (4%), ஷாப்பிங் (2%) என ஆக மொத்தம் 16 சதவிகித பணத்தை எப்படி சேமிப்பது என்று முதலில் பார்ப்போம். இந்த நான்கு செலவுகளையும் ஆண்டுக்கு ஒருமுறை செய்கிற மாதிரி திட்டமிட்டுக்கொள்ளலாம்'' என்றவர், விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
பள்ளிக்கல்விச் செலவு!
உங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை ஆண்டின் தொடக்கத்தில் ஒரே தவணையில் கட்டும்படி நீங்கள் திட்டமிடலாம்.  இதனால் சில நூறு ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும். தவிர, இந்தப் பணத்தை வங்கியில் சேமிக்கும்போது உங்களுக்கு வட்டி வருமானமும் கிடைக்கும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காயை எளிதாக நீங்கள் பறித்துவிடலாம்.
உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உங்கள் சம்பளத்திலிருந்து 6% பணத்தை எடுத்து, ஆண்டுக்கு 7-8% நிரந்தர வருமானம் தரக்கூடிய வருடாந்திர வங்கி ஆர்.டி.யில் சேமிக்கலாம். இந்த ஆர்.டி.யைக் கல்விக் கட்டணம் கட்டவேண்டிய மே மாதத்திற்கு முன்பே கிடைக்கிற மாதிரி ஆரம்பிக்கலாம். பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு சேரும் பணம் வட்டியோடு நமக்குக் கிடைக்கும்.  
இன்ஷூரன்ஸ்!
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பது ஹெல்மேட் போடாமல் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் பைக்கை ஓட்டுவதற்குச் சமம். இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இரண்டு வகை. ஒன்று, மெடிக்ளைம் பாலிசி; இன்னொன்று, லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டமான டேர்ம் பாலிசி. ஒருவர் 6 லட்சம் ரூபாய் ஒரு வருடத்திற்குச் சம்பாதிப்பதாக எடுத்துக்கொண்டால், அவர் 12 முதல் 15 மடங்கு, அதாவது 75 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுக்கவேண்டும்.
30 வயதுடைய ஆண்களுக்கு 30 வருட பாலிசிக்கு ஆண்டுக்கு 17,500 ரூபாய் பிரீமியமாகக் கட்டினால் போதும்; பெண்களாக இருக்கும்பட்சத்தில் 15,000 ரூபாய் பிரீமியம். புகைபிடிக்கும் பழக்கம் இருப்பின் கட்ட வேண்டிய பிரீமியத்தில் 20% அதிகம். மெடிக்ளைமுக்காக 2%, லைஃப் இன்ஷூரன்ஸுக்காக 4% என 6% பணத்தை 7-8% வருமானம் தரக்கூடிய வங்கி ஆர்.டி.யில். சேமிக்கலாம். இதன்மூலம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தை ஆண்டுக்கொருமுறை கவலை இல்லாமல் கட்டுவதோடு, வட்டி வருமானத்தை அவசரச் செலவுக்கு ஒதுக்கி வைக்கலாம்.
ஷாப்பிங்!
பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என பண்டிகைகளை ஒட்டி துணிமணி களை வாங்குவது நம் வழக்கம். நம் சம்பளத்தில் 25% பணத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஷாப்பிங் செய்ய செலவழிக்கலாம் என்பதால் ஒவ்வொரு மாதமும் 2% பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது. இந்தப் பணத்தையும் 7-8% வருமானம் தரக்கூடிய வருடாந்திர வங்கி ஆர்.டி. யில் சேமிக்கலாம்.
சுற்றுலா!
ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலாச் செல்ல நினைப்பது இன்றைய பல குடும்பங்களின் வழக்கமான விஷயமாகி விட்டது. சுற்றுலாச் செல்ல வேண்டும் என்று முன்னதாகவே திட்டம் தீட்டும் பொழுது பயண கட்டணத்திற்கென்று அதிகமாகச் செலவு செய்யும் நிலைமை இருக்காது. மேலும், இரவு பிரயாணம் மற்றும் குளிர்காலங்களில் இரண்டாம் வகுப்பில் செல்லலாம். இதனால் மிச்சமாகும் தொகையை சுற்றுலாச் சென்ற இடத்தில் தாராளமாகச் செலவு செய்யலாம்.
சுற்றுலாவில் வெளியில் சுற்றும் நேரம் அதிகம், விடுதி தூங்குவதற்காக மட்டுமே என்று இருந்தால், தங்கும் விடுதிக்கு அதிக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுற்றுலாவிற்காக 4% தொகையை 7-8% வட்டி கிடைக்கும் வருடாந்திர ஆர்.டி.-யில் முதலீடு செய்யலாம். அலுவலகத்தில் எல்.டி.ஏ. கிடைக்கும் என்கிறவர்கள் அந்தப் பணத்தையும் சேர்த்து சுற்றுலாவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுலாச் செலவிற்கு எல்.டி.ஏ. மட்டும் போதும் என்கிறவர்கள் மேலே சொன்ன சேமிப்பை மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நம்மில் பெரும்பாலானவர் கள் வெளிநாட்டு சுற்றுலா மீது மோகம் கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். வருமானம் இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு வருடா வருடம் சென்று வரலாம் என்றாலும், நடுத்தர வர்க்கத்தினர் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தைப் பொறுத்து திட்டம் தீட்டினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் சென்று வர முடியும். இதற்கென்று 10% தொகையை 10% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு 30,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாச் செல்ல விருப்பப்பட்டால் 10% தொகை, அதாவது மாதம் 3,000 ரூபாயை மூன்று ஆண்டுகள் 10% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது 1.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.  
சேமிப்பு மற்றும் முதலீடு!
இதுவரை ஆண்டுக்கொருமுறை செய்யும் சில முக்கிய செலவுகளுக்கான பணத்தை எப்படி சேமிப்பது என்று பார்த்தோம். இனி எதிர்காலத் திட்டங்களுக்காக நாம் செய்யவேண்டிய முதலீடுகளை எப்படி அமைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.
செல்லும் வாகனத்தைப் பொறுத்து செல்லும் நேரம் மாறுபடும் என்பதற்கு ஏற்ப, நம்முடைய முதலீட்டுக் கருவியைப் பொறுத்து நமக்குக் கிடைக்கும் லாபம் கூடும் அல்லது குறையும். நீண்டகால தேவைகளான குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் ஓய்வுக்காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட் (எஸ்.ஐ.பி. மூலம்) போன்ற முதலீட்டை பயன்படுத்தலாம்.
சேமிப்பு மற்றும் முதலீட்டிற்காக  ஒதுக்கச் சொல்லியிருந்த 20% தொகையில், 6% குழந்தைகளின் உயர்கல்விக்கு, 4% குழந்தைகளின் திருமணத்திற்கு, 6% உங்கள் ஓய்வுக்காலத்திற்கு மற்றும் இதர தேவைகளுக்கு 4% தொகையையும் முதலீடு செய்ய வேண்டும்.
நீண்டகால முதலீடு என்பதால் ஈக்விட்டி டைவர்சிஃபைட் வகை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உதாரணத்திற்கு 30 வயதுள்ளவர்கள், 30,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கான விவரத்தை மேலே அட்டவணையாகத் தந்திருக்கிறேன். எதிர்பார்க்கும் வருமானம் 15%.
குடும்பச் செலவை சமாளிக்க ஃபார்முலாவை யும், மிச்சப்படுத்தும் பணத்தை எதில் முதலீடு செய்யவேண்டும் என்றும் சொல்லிவிட்டேன். அதன்படி நடக்கவேண்டியது நீங்கள்தான்!''

Sunday, 23 December 2012

How to Control Your Monthly Expenses - A Practical Solution!


சூப்பர் ஃபார்முலா!

இன்றைய நிலையில் நம் வாழ்க்கை வரவு எட்டணா, செலவு பத்தணாவாகத்தான் இருக்கிறது. சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவு செய்வதினாலேயே நம்மில் பலர் நிரந்தர கடனாளிகளாக இருக்கிறோம்.
 காட்டுக்குதிரையைப் போல் தறிகெட்டு ஓடும் இந்த செலவை, கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு மந்திரம் நமக்குத் தெரிந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக் கிறீர்களா?
சிம்பிள். நம் செலவு ஒவ்வொன்றும் எந்த அளவில் இருக்கவேண்டும் என்பதற்கு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் எளிய ஃபார்முலா இருக்கிறது.
இந்த ஃபார்முலாபடி நீங்கள் உங்கள் செலவை அமைத்துக்கொண்டால், உங்களுக்குக் கடன் பிரச்னையும் இருக்காது. கை நிறைய காசும் இருக்கும். எதிர்காலம் குறித்து எந்த பயமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம்!
நம் வீட்டின் தேவைகள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை இனி விளக்கமாகப் பார்ப்போம்.

Sunday, 25 November 2012

My 12th Financial Planning Article in Naanayam Vikatan on 25th November 2012

இனி எல்லாம் வளமே!
ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாதச் சம்பளம் 17,300 ரூபாய். இவரது மனைவி நர்மதா (வயது 24), தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். பிடித்தம் போக மாதச் சம்பளம் 13,500 ரூபாய். இவர்களின் ஒரு வயதான செல்ல மகன் ஸ்ரீஜேஷ்.
இன்ஷூரன்ஸ் விவரம்:
மகன் பெயரில் இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் தன் பெயரில் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி என எட்டு லட்சம் கவரேஜுடன் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார். இதற்காக மாதம் 2,500 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார்.  
சொத்து விவரம்:
சொந்த ஊரான அரியலூரில் இருக்கும் மூன்று காலி மனைகள்.
1. 2,500 சதுர அடி - தற்போதைய மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்.
2. 1,040 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
3. 1,540 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஆறு லட்சம் ரூபாய்.
தேவைகள்:
மகனின் படிப்பிற்கு இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 17 வருடம் பாக்கி இருக்கிறது.
25 வயதில் மகனுக்குத் திருமணம் செய்ய திருமண செலவிற்கு இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 24 வருடம் பாக்கி இருக்கிறது.
ஓய்வுக்காலத்திற்கு இன்றைய நிலையில் 10,000 ரூபாய் மாத வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சில ஆண்டுகளுக்குள் வீடு கட்ட வேண்டும்.
மேலே சொன்ன பாலமுருகன் குடும்ப பொருளாதார விவரங்களின்படி நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் பி.பத்மநாபன்.

இன்ஷூரன்ஸ் அவசியம்!
ஏற்கெனவே இவர் எடுத்து வைத்திருக்கும் பாலிசிகள் அனைத்தும் குறைந்த கவரேஜ் கொண்ட பாலிசிக்கு அதிக பிரீமியம் செலுத்தும்படியாக இருப்பதால், இந்த மூன்று பாலிசிகளையும் சரண்டர் செய்துவிடுவது நல்லது. இதனால் மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும். அதை எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே முதலீட்டுக்காக மீதம் இருக்கும் தொகை  5,050 ரூபாயுடன் 2,500 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 7,550 ரூபாய் எதிர்கால முதலீட்டிற்கு மீதம் இருக்கும்.
முதலில் பாலமுருகன் 30 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 6,200 ரூபாய்), நர்மதாவுக்கு 25 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 4,600 ரூபாய்) டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் சேர்த்து 10,800 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். தற்போது இவர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எதுவும் கிடையாது என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 6,500 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். ஆக மொத்தம் புதிதாக எடுக்க இருக்கும் பாலிசிகளுக்கு பிரீமியம் கட்ட மாத பட்ஜெட்டில் 1,500 ரூபாய் ஒதுக்கி வைத்தால் போதும்.
மகனின் கல்விக்கு!
மகனை ஒரு நல்ல பட்டதாரியாக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார் பாலமுருகன். இன்று மகனுக்கு வயது ஒன்றுதான் என்பதால் இன்னும் கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்க 17 வருடங்கள் பாக்கி இருக்கிறது. வருடத்திற்கு 7% பணவீக்க அடிப்படையில் கணக்கிட்டால் மகனின் கல்விக்கு 17 ஆண்டுகள் கழித்து
15.79 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றைய நிலையில் மாதம் 2,000 ரூபாயை ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் 1.12.12 முதல் 31.12.29 வரை முதலீடு செய்துவர வேண்டும். இந்த ஃபண்டில் நாம் எதிர்பார்க்கும் வருமானம் 15% கிடைத்தால் முதலீடு முதிர்வின்போது 18.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை மகனின் கல்விச் செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
மகனின் திருமணத்திற்கு!
மகனுக்கு 25 வயதில் திருமணம் செய்துவைக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். இன்னும் 24 ஆண்டுகள் கழித்து 7% பணவீக்க அடிப்படையில் 25.36 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 1,000 ரூபாயை முதலீடு செய்துவர வேண்டும். முதலீட்டுக் காலம் 1.12.12 முதல் 31.12.36 வரை. 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. டிஸ்கவரி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் தொகை 27.83 லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி மகனின் திருமணத்தை சிறப்பானதாக முடிக்கலாம்.
வீடு வாங்க!
''வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. காலி மனைகள் ஏற்கெனவே இருக்கிறது என்பதால் அதில் கட்டலாமா? நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் பணியிடத்து மாற்றம் இருக்கும்பட்சத்தில் வாடகை வீட்டில் இருப்பதுதான் சரியா? அல்லது சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாமா? அல்லது இடத்தில் முதலீடு செய்வது சரியா?'' என்று பாலமுருகன் பல கேள்விகளைக் கேட்டார்.
சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் கனவு. எனவே, பாலமுருகன் தாராளமாக வீடு வாங்கலாம். ஆனால், அதற்குண்டான பொருளாதாரம்தான் குறைவு. எதிர்காலச் சேமிப்பிற்கு மீதமிருக்கும் தொகை 7,550 ரூபாய் மகனின் கல்வி, திருமணம், ஓய்வுக்கால மற்றும் புதிதாக எடுக்கச் சொல்லி இருக்கும் டேர்ம் மற்றும் ஹெல்த் பாலிசிகளுக்கான பிரீமியம் என அனைத்திற்கும் சரியாக இருக்கும். வங்கியில் கடன்  வாங்கலாம் என்றாலும் இ.எம்.ஐ. கட்ட இன்றைய வருமானத்தில் போதுமான அளவிற்கு தொகை கிடையாது. அதனால் இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு எங்கு வேலை அமைகிறது என்பதைப் பொறுத்து வீடு வாங்கத் திட்டம் போடுவது நல்லது. அதற்குள் இருவருக்கும் சம்பளம் ஓரளவுக்கு உயர்ந்திருக்கும். நகைக் கடனும் ஓரளவுக்குக் குறைந்திருக்கும்.  
ஓய்வுக் காலம்!
பாலமுருகனுக்கு சம்பளத்தில் எந்தப் பிடித்தமும் இல்லை என்பதால் இவரது சம்பளத்திலிருந்து கண்டிப்பாக ஓய்வுக் காலத்திற்கென்று ஒரு தொகையை ஒதுக்கியே ஆகவேண்டும். இவரின் மனைவிக்கு சம்பளத்தில் பி.எஃப். பிடித்தம் இருப்பதால் ஓய்வுக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். இவர் இன்றைய நிலையில் மாதம் 10,000 ரூபாய் இருந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். இவரின் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் 26 ஆண்டுகள் பாக்கி இருப்பதால் அன்றைய காலகட்டத்தில் மாதம் 58,000 ரூபாய் தேவைப்படும். மாதம் 58,000 ரூபாய் வருமானம் வருவதற்கு இவர் கையில் 1.13 கோடி ரூபாய் இருக்க வேண்டும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 3,000 ரூபாயை ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுகளில் 1.12.12 முதல் 31.12.38 வரை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் 1.13 கோடி ரூபாய் மற்றும் மனைவியின் அலுவலகத்தில் கிடைக்கும் பி.எஃப். தொகையையும் வருமானம் தரும் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து வைக்க வேண்டும். முதலீட்டுக் காலம் அதிகம் என்பதால் ஃபண்ட் முதலீடுகளை ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆலோசகரின் உதவியோடு மறுபரிசீலனை செய்து பார்ப்பது அவசியம். வளம் பெற வாழ்த்துக்கள்!

Friday, 9 November 2012

Why Not Your SIP Will Deliver 15% CAGR in the Next 5 Years From Now?

Sensex closed at 19590 exactly on 5th November 2007 and after 5 years it is trading at 18762, which means, it is 4.42% discount till today, if you measure point to point returns!

If you look at the index funds (Passive Funds, Sensex Based) the average returns of 5 funds returns over the same period, close to -1.04% whereas the actively managed funds delivered 3.03%. The difference is 4.07%

If you look at the SIP returns the index funds delivered 7.2% whereas actively managed funds delivered 10.5% in the above said period.

If one assume, the SENSEX will only give 5% CAGR for the next 5 years (as on 5th November 2017), (one can't be more conservative than this assumption), then the lump sum investment would fetch 5.52% which is 5% CAGR for 5 years, (when index gives -1.04%, fund has delivered 4.07%, if the index delivered 5% CAGR then it would be 9.57%). Post tax 9.57% is still a good return in the next 5 years as far as conservative investors are concerned!!!

Whereas the SIP returns in the last 5 years average itself is 10.5% if you add another 5.52% one can easily expect 15% in SIP investments which is very good compared to single digit returns of any type of RDs are concerned.

Based on the above analysis, I would reiterate what I always recommend, one can easily expect 15% CAGR in a well-diversified equity mutual funds.